மூலிகை உணவகத்தில் அவல் கேசரி
சென்னை:சென்னை மாநகராட்சி அலுவலகத்தில், மூலிகை உணவகம் திறந்து, நேற்றுடன் ஓராண்டு நிறைவடைந்ததை முன்னிட்டு, நேற்று மதிய உணவுடன், அவல் கேசரி இலவசமாக வழங்கப்பட்டது.
சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகமான ரிப்பன் மாளிகையில் இருந்த வழக்கமான உணவகம் மாற்றப்பட்டு, ‘உணவே மருந்து; மருந்தே உணவு’ என்ற அடிப்படையில், கடந்த ஆண்டு டிச.,5ம் தேதி மூலிகை உணவகம் திறக்கப்பட்டது.
நேற்றுடன் ஓராண்டு நிறைவு பெற்றதை முன்னிட்டு, நேற்று அங்கு மதிய உணவு சாப்பிட்ட பொதுமக்களுக்கு இலவசமாக அவல் கேசரி வழங்கப்பட்டது. இந்த உணவகத்தில் மூலிகை உணவுகள் மட்டுமல்லாது, மூலிகை பொடிகளும் விற்கப் படுகின்றன.