ஜன.4 ராமநாதபுரத்தில் வேலைவாய்ப்பு கருத்தரங்கம்

Vinkmag ad

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊராட்சி மன்ற கூட்ட அரங்கில் வரும் ஜனவரி 4 ஆம் தேதி காலையில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்குதல் தொடர்பான கருத்தரங்கம் நடைபெறவுள்ளது.

இக்கருத்தரங்கில் வங்கி அதிகாரிகள், அரசு அலுவலர்கள் உள்பட பலரும் கலந்து கொண்டு, மாவட்டத்தில் தொழில் தொடங்க இருக்கும் வாய்ப்புகள், அரசின் சலுகைகள் குறித்து விளக்கிப் பேசவுள்ளனர்.

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இந்த அரிய வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளுமாறு ஆட்சியர் அலுவலகம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News

Read Previous

டிசம்பர் 28, ஷார்ஜாவில் நாட்டிய அரங்கேற்றம்

Read Next

தமிழ்நாடு துவக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் தேர்வு

Leave a Reply

Your email address will not be published.