டிசம்பர் 28, ஷார்ஜாவில் நாட்டிய அரங்கேற்றம்
ஷார்ஜா : ஷார்ஜா இந்தியன் அசோஷியேஷனில் நாட்டிய அரங்கேற்றம் நிகழ்ச்சி 28.12.2013 சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு நடைபெற இருக்கிறது.
சஞ்சனாவின் நாட்டிய அரங்கேற்றம் நிகழ்ச்சி அதனைத் தொடர்ந்து ஜனனி சுரேஷின் தொடர் அரங்கேற்ற நிகழ்ச்சியும் நடைபெற இருக்கிறது.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக சமூக சேவகி ஜெயந்தி மாலா சுரேஷ், சுஜாதா ஆகியோர் பங்கேற்கின்றனர்.
சஞ்சனா கோபால் ஷார்ஜா அவர் ஓன் இந்தியப் பள்ளியில் 12 ஆம் வகுப்பும், ஜனனி சுரேஷ் ஷார்ஜா டெல்லி பிரைவேட் பள்ளியிலும் பயின்று வருவதாக இவர்களின் குரு கலைமாமணி கவிதா பிரசன்னா தெரிவித்துள்ளார்.
வசந்த சங்கர் ராமன் வோகலும், சங்கரராமன் மிருதங்கமும், ரவிசங்கர் வயலினும், ராஜேஷ் ராகவன் ஃபுளூட்டும் வாசிக்கின்றனர்.
இந்நிகழ்வில் பங்கேற்றுச் சிறப்பிக்க அலமேலு கோபால் மற்றும் சீதாலட்சுமி சுரேஷ் கிருஷ்ணன் தம்பதியினர் அழைக்கின்றனர்.
மேலதிக விபரங்களுக்கு :