இராமநாதபுரத்தில் ஆன்மீக மாநாடு

Vinkmag ad

இராமநாதபுரத்தில் ஆன்மீக மாநாடு

இராமநாதபுரம் : இராமநாதபுரம் நகரில் 22.07.2018 ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணி முதல் வெளிப்பட்டிணம் பாசிப்பட்டறை ஜமாஅத்தின் சார்பில் கட்டப்பட்டுள்ள பல்வகை பயன்பாட்டு கூடத்தில் ஆன்மீக மாநாடு நடக்க இருக்கிறது.

இந்த மாநாட்டுக்கு அல்ஹாஜ் சையிது நிஜாமி ஷாஹ் நூரி பாக்கவி தலைமை  வகிக்க இருக்கிறார்.

பனைக்குளம் மௌலவி காஜா முஹ்யித்தீன் கிராஅத் ஓதுகிறார். பாசிப்பட்டறை முஹைதீன் ஆண்டவர் ஜும் ஆ பள்ளிவாசல் தலைமை இமாம் மௌலவி எஸ்.எம். முஹம்மது அப்துல் காதிர் வரவேற்புரை நிகழ்த்துகிறார்.

மதுரை ஒத்தக்கடை நாஃபிவுல் உலூம் அரபிக் கல்லூரி நிறுவனர் மௌலவி எம். முஹம்மது காசிம், திண்டுக்கல் தாமரைப்பட்டி அந்நூர் இஸ்லாமியா அரபிக் கல்லூரியின் முதல்வர் எம்.ஒய். முஹம்மது ரஹ்மத்துல்லாஹ் நிஜாமி, தொண்டி அல் அஜ்ஹரிய்யா அரபிக் கல்லூரியின் முதல்வர் ஹெச். முஹம்மது ஜலாலுதீன், சேலம் அம்மாபாளையம் ஜும்ஆ பள்ளிவாசல் தலைமை இமாம் மௌலவி வி.ஏ. முஹம்மது இப்ராஹிம் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்த இருக்கின்றனர்.

பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் விபரங்களுக்கு 94886 72262 / 94 872 11976 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளவும்.

News

Read Previous

தூங்குமோர் இனம்வருமா?

Read Next

இயற்கை தந்த வரமே மரங்கள்.. அவற்றை வளர்ப்போம்.. கொல்ல வேண்டாம்!

Leave a Reply

Your email address will not be published.