தூங்குமோர் இனம்வருமா?

Vinkmag ad
பச்சிளங் குழந்தையைப் பலர்சூழ்ந்து புணர்ந்திட்ட
***பாதகச் செயல்கண்டு பதைக்கிறதே மனமிங்கே!
*** பாவிகள் மானிடரோ? பரந்தாமா! பகர்வாயா?
***பைந்தமிழ் நாட்டினிலே பண்புகள் போனதடா!
இச்சைகள் மிகுந்திட்டால் இவள்தாய்; இவள்தமக்கை; ***இவள்தன்சேய் மறப்பரோ? இழிகுலமாய்ப் போனதிங்கே! ***இன்னமும் வாழ்வீரோ இச்செகத்தில் இணப்புண்ணாய்? ***இப்பொழுதே வெட்டியெறிக! இவர்தம் இதயத்தை!!
வைச்சசிலை தெய்வமென வணங்கிடுமித் திருநாட்டில் ***வஞ்சியவள் வாழவொரு வழியில்லை! வெட்கமன்றோ! ***வசதியுள்ளோர் செய்திட்டால் வன்மையெனச் சொல்வீரே; ***வக்கிரமாய் செய்திட்ட வைக்கோலை என்னசொல்வீர்?
துச்சமாகிப் போனதிங்கே தோகையவள் மெய்யதுவும் ***துன்பக்கடல் சூழ்ந்துகாண் தொலைத்திட்ட மெய்யறிவால் ***துயிலயினி முடியுமா? துக்கமது தொலையுமா? துணிவுடனே ***எதிர்த்திடவும் தூங்குமோர் இனம்வருமா?
கண்ணீருடன்
சுரேஜமீ

News

Read Previous

உதவிநிற்கும் என உணர்வோம் !

Read Next

இராமநாதபுரத்தில் ஆன்மீக மாநாடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *