நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல்
நாகையில் இருந்து இலங்கைக்கு வரும் 10ஆம் தேதி முதல் பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படவுள்ளது. “சிரியாபாணி” என பெயரிடப்பட்ட இந்த கப்பலில் பயணிக்க ஒரு நபருக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி வரியுடன் சேர்த்து 6 ஆயிரத்து 500 ரூபாய் பயண கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குளிர்சாதன வசதியுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கப்பல், நாளை நாகை துறைமுகம் வரவுள்ளது. இதன்மூலம் நாகை துறைமுகத்தில் இருந்து 60 நாட்டிக்கல் மைல் தூரத்தில் அமைந்துள்ள, இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு சுமார் மூன்றரை மணி நேரத்தில் சென்றடைய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.