துபாயில் மரணமடைந்த சகோதர சமுதாயத்தை சேர்ந்தவரின் உடலை இறுதிச் சடங்கு செய்து தகனம் இஸ்லாமிய சகோதரர்கள்
துபாயில் மரணமடைந்த இந்து சமுதாயத்தை சேர்ந்தவரின் உடலை
இறுதிச் சடங்கு செய்து தகனம் இஸ்லாமிய சகோதரர்கள்
துபாய் :
துபாயில் வேலூர் பகுதியைச் சேர்ந் த அருணா தங்கப்பா (வயது 58) கடந் த 2021 டிசம்பர் 15 ஆம் தேதி ஹார்ட் அட்டாக் காரணமாக மரணமடைந் தார்.
அவர் தான் வேலை செய்த இடத்தில் இருந் து வெளியேறி சட்ட விரோதமாக வசித்து வந் தார். இதனால் அவருக்கு தெரிந்தவர்கள் இந் திய துணை தூதரகத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
பின்னர் வேலூரில் வசித்து வரும் அவரது சகோதரர் அன்புவுக்கு கூறப்பட்டது. தனது சகோதரர் ஏற்கனவே விவகாரத்து பெற்றவர். இதனால் அவரது உடலை துபாயிலேயே தகனம் செய்ய கேட்டுக் கொண்டார்.
எனினும் அதற்கான ஆவணங்கள் கிராம நல அலுவலரிடம் இருந்து பெற்றுத்தர தாமதம் ஏற்பட்டது.
இந்த ஆணவங்கள் பெறப்பட்ட பின்னர் இந்திய துணை தூதரத்தின் ஒத்துழைப்புடன் 06.02.2022 ஞாயிற்றுக்கிழமை இந்து சமுதாய முறைப்படி இறுதிச் சடங்கு செய்யப்பட்டு ஜெபல் அலி மயானத்தில் மின்சாரம் மூலம் தகனம் செய்யப்பட்டது.
இந்த பணியில் சமூக ஆர்வலர்கள் முதுவை ஹிதாயத், லெப்பைக்குடிக்காடு சையது குலாம் ஹுசைன், திருவாரூர் நிஜாம், சென்னை வெங்கட், மதுரை பாலாஜி, சென்னை பாலாஜி உள்ளிட்டோர் ஈடுபட்டனர்.
தனது சகோதரரின் உடலை தகனம் செய்யும் பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் அவரது சகோதரர் நன்றி தெரிவித்தார்.
இந்தியாவில் இன்றைய சூழலில் இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரம் அதிகரித்து வரும் நிலையில் துபாயில் இந்து சகோதரரின் உடலை இஸ்லாமியர்கள் தகனம் செய்யும் பணியில் ஈடுபட்டது மனிதாபிமானத்தை வெளிப்படுத்துவதாக அமைந்திருந்தது.