எமனேசுவரத்தில் உலமா உமரா கலந்தாய்வு கூட்டம்
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வட்டார ஜமாஅத்துல் உலமா சபை ஏற்பாட்டில் உலமா உமரா கலந்தாய்வு கூட்டம் எமனேஸ்வரம் ஜும்ஆ பள்ளிவாசலில் 08.02.2022 செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
வட்டார ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் மௌலானா வலியுல்லாஹ் நூரி இந்நிகழ்வுக்கு தலைமையேற்றார். மாவட்டத் தலைவர் மௌலானா அஹ்மத் இப்றாஹீம் மிஸ்பாஹி துவக்க உரையாற்றினார்.
வட்டாரத்திலுள்ள பள்ளிவாசல் நிர்வாகிகள் ஐக்கிய ஜமாத் நிர்வாகிகள் ஆலிம்கள் திரளாகப் பங்கேற்றனர்.
தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை மாநிலத் தலைவர் மௌலானா P.A. காஜா முயீனுத்தீன் பாகவி, ஜமாஅத்துல் உலமா சபையின் ‘உலமா உமரா கலந்தாய்வுக் குழு’ மாநில பொறுப்பாளர் மௌலானா தொண்டி முஸ்தபா ரஷாதி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
மாவட்ட ஐக்கிய ஜமாத் செயலாளர் Dr. ஜெய்னுல் ஆலம், ஜமாஅத்துல் உலமா மாவட்ட செயலாளர் மௌலானா ஜலாலுத்தீன் அன்வாரி, மாவட்ட பொருளாளர் முஹம்மது சாஹிப் ஃபைஜி ஆகியோர் உரையாற்றினர்.
பள்ளிவாசல் நிர்வாகிகள் பங்கேற்று கருத்துரை வழங்கினர். பேரன்பாளன் அல்லாஹ் இந்த முயற்சியை சமுதாயத்துக்கு பலன் தரும் முயற்சியாக ஏற்றுக்கொள்வானாக.