துபாயில் இனிய நந்தவனம் இலங்கை சிறப்பிதழ் வெளியீடு
துபாயில் இனிய நந்தவனம் இலங்கை சிறப்பிதழ் வெளியீடு
துபாய் :
துபாய் லேவண்டர் ஹோட்டல் வளாகத்தில் எம்.டி.எஸ். ஈவண்ட்ஸ் மற்றும் திருச்சி ஜமால் முகம்மது கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்கத்தின் அமீரக பிரிவும் இணைந்து நடத்திய ‘இனிய நந்தவனம்’ மாத இதழின் இலங்கை சிறப்பிதழ் வெளியீடு, மகிழ்வித்து மகிழ்வோம், நிமிர்ந்து நில் துணிந்து சொல் ஆகிய குறும்படம் மற்றும் மேடை நாடகத்தில் பங்குபெற்ற கலைஞர்களுக்கு பாராட்டு கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி டிசம்பர் 30 ஆம் தேதி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக தனியார் கல்வி நிறுவன மேலாண்மை இயக்குநர் ஆனந்த் சுப்ரமணியம், பிரபல வங்கியின் எக்சிகியூடிவ் இயக்குனர் ஆனந்த் சுப்ரமணியன், திருச்சி ஜமால் முகமது கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்க அமீரக பிரிவு பொதுச் செயலாளர் ஜமால் முகைதீன் மற்றும்
சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நந்தவனம் சிறப்பிதழை வெளியிட்ட இலங்கை இலக்கிய புரவலர் ஹாசிம் உமர், நிகழச்சியை ஒருங்கிணைத்து வழிநடத்திய கல்லிடைக்குறிச்சி தேசிய கல்வி அறக்கட்டளையின் தலைவர் மற்றும் எம்.டி.எஸ். ஈவண்ட்ஸ் மேலாண்மை இயக்குனர் கல்லிடைக்குறிச்சி முனைவர் ஆ. முகமது முகைதீன், ரோகினி, சமூக ஆர்வலர் ரமாமலர், நாகா, அபுதாஹிர், எம்.ஏ.கே. அப்துல்காதர், திருச்சி ரஹ்மத்துல்லா ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் நிமிர்ந்து ‘நில் துணிந்து சொல்’ குறும்படம் திரையிடப்பட்டது.
அமீரகத்தில் வசிக்கின்ற தமிழ் இலக்கிய ஆர்வலர்கள், தொழிலதிபர்கள், குறுநாடகக் கலைஞர்கள் என பலர் கலந்துகொண்டனர்.