கீழக்கரை வரலாற்று ஆய்வு மையம் மற்றும் தமிழ் சங்கம் தொடக்க விழா

Vinkmag ad

கீழக்கரை வரலாற்று ஆய்வு மையம் மற்றும் தமிழ் சங்கம் தொடக்க விழா

கீழக்கரை :
கீழக்கரை வரலாற்று ஆய்வு மையம் மற்றும் தமிழ் சங்கம் தொடக்க விழா
31.12.2023 ஞாயிற்றுக்கிழமை காலை ஹமீதியா மெட்ரிகுலேஷன் பள்ளிக்கூட வளாகத்தில் வெகு சிறப்புடன் நடைபெற்றது.

இந்த விழா நிகழ்ச்சியினை ஏ.ஜி.ஏ.ரிபாய்தீன் தொகுத்து வழங்கினார். அவர் தனது உரையில் கீழக்கரையின் தொன்மையான வரலாற்று நிகழ்வுகளை, தமிழ் அறிஞர்கள் குறித்து நினைவு கூறினார். இதனை வருங்கால சந்ததியினர் பயனடையும் வகையில் ஆவணமாக தொகுக்கப்பட வேண்டும் என்ற அடைப்படையில் இந்த ஆய்வு மையம் தொடங்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.
முத்து,பவளம்,சங்கு போன்ற கடலில் விளையும் பொருட்களை பல நாடுகளுக்கும் சென்று விற்பனை செய்வதில் கீழக்கரை வாணிப பெருமக்கள் பெரும் சிரத்தை எடுத்த நிகழ்வுகளால் கீழக்கரையின் கலாச்சாரம் உலகமெங்கும் பரவியதாக நினைவு கூறிய வரலாற்று ஆய்வாளர்களின் தகவல்கள் இளைய தலைமுறையினருக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
கல்வி மற்றும் சமூக நல பணிகளில் தடம் பதித்த சீதக்காதி அறக்கட்டளை நிறுவனம்,முகம்மது சதக் அறக்கட்டளை நிறுவனம்,கண்ணாடி வாப்பா அறக்கட்டளை உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுக்கு பொற்கிழி விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
கீழக்கரையும் தமிழ் மொழியும் என்ற அறிய தகவல்களை இராமநாதபுரம் கம்பன் கழக செயலாளர் மானுட பிரியன்(எ)குதுபுதீன் ஐபக்,மக்கள் சேவை அறக்கட்டளை நிறுவனர் எம்.கே.இ.உமர் உள்ளிட்டோர் வழங்கினர். பரமக்குடி பேராசிரியர் ஹிதாயத்துல்லாஹ் சேதுகவி ஜவ்வாதுப் புலவர் உள்ளிட்ட பல்வேறு வரலாற்று தகவல்களை வழங்கினர். முஸ்லிம்கள் அன்னிய மொழி பேசக்கூடியவர்களாக சித்தரிக்கும் போக்கு கவலையளிக்கிறது. தமிழ் மொழிக்கு சொந்தக்காரர்கள் நாம் என பேசினார்.
நிகழ்ச்சியில் அமீரக நாடுகளின் முதன்மை தமிழ் செய்தியாளர் முதுவை ஹிதாயத்,வரலாற்று ஆய்வாளர் மஹ்மூது நைனா,அப்துல் ரசாக்,நமது கீழக்கரை வெல்ஃபேர் கமிட்டி பொருளாளர் ஷஃபீக் ஹாஜியார்,டி.பி.எஸ்.சுலைமான்,மூர் ஹஸனுதீன்,அரூஸிய்யா அரபிக்கல்லூரி மாணவர்கள்,ரோட்டரி கிளப் தலைவர் பொறியாளர் கபீர்,ஹமீதியா ஆண்கள் பள்ளி ஆசிரியர் சலீம்,மூர் ஜெய்னுதீன்,முஹிப்புல் உலமா முஹம்மது மஃரூப் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
இராமநாதபுரம் ராஜா நாகேந்திர சேதுபதி கலந்து கொண்டு சிறப்பித்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அவர் தனது உரையில் சேதுபதி மன்னரின் அரசவைக்கும், கீழக்கரைக்கும் இடையே இருந்து வந்த நெருங்கிய தொடர்பினை விவரித்தார். இந்த ஆய்வு மையத்தின் பணிகளுக்கு ஒத்துழைப்பாக இருப்போம் என தெரிவித்தார்.
முன்னதாக அனைவரையும் முபாரக் அலி வரவேற்றார்.

News

Read Previous

துபாயில் இனிய நந்தவனம் இலங்கை சிறப்பிதழ் வெளியீடு

Read Next

முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் 45 வது ஆண்டு பரிசளிப்பு விழா

Leave a Reply

Your email address will not be published.