சர்வதேச மகிழ்ச்சி தினம்
சர்வதேச மகிழ்ச்சி தினம். 20.3.2022.
இன்பம் என்பது பொருளால் வருவது.மகிழ்ச்சி என்பது மனதால் வருவது. இன்பத்திற்கு எல்லை உண்டுமகிழ்ச்சி என்பது எல்லையற்றது.இன்பம் என்பது இரைச்சல் நிறைந்தது. மகிழ்ச்சி என்பதோ அமைதியானது. இன்பம் என்பது சூழ்ந்திருப்பது மகிழ்ச்சி என்பது சூழ்நிலை பொறுத்தது. அடுத்தவர் உழைப்பில் வாழ்வது இன்பம். தன் உழைப்பில் பெறுவது மகிழ்ச்சி.
போரால் பகைவரை வெல்வதுஇன்பம். நட்பால் பகைவரை மாற்றுதல் மகிழ்ச்சி. அதிகாரத்தால் வருவது இன்பம்.அரவணைப்பாலே வருவது மகிழ்ச்சி.நினைத்ததை அடைந்தால் வருவது இன்பம். கிடைத்ததில் திருப்தி அடைவது மகிழ்ச்சி. ஏமாற்றுவதால் கிடைப்பது இன்பம். ஏமாறாமல் இருப்பது மகிழ்ச்சி.அஞ்ஞானத்தால் வருவது இன்பம். மெய்ஞானத்தால் வருவது மகிழ்ச்சி. பட்டறிவாலே கிடைப்பது இன்பம். பகுத்தறிவாலே வருவது மகிழ்ச்சி. உணர்ச்சிபூர்வமாய் வருவது இன்பம்.உணர்வு பூர்வமாய் பெறுவது மகிழ்ச்சி .இன்பம் வேண்டாம் என்பது அல்ல,மகிழ்ச்சி நாடுதல் மாண்புடைத்தாகும். மகிழ்ச்சியுடன், சிலேடை சித்தர் சேது சுப்ரமணியம்.