உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்
உழைப்பாளர் தின வாழ்த்துக்கள் 1.5.2022
உழைப்பே உடலுக்கு பலம் தரும் .
உழைப்பே உலகோர்க்கு நலம் தரும் . உழைப்பே உலகோர்க்கு வளம் தரும் . உழைப்பே அனைவர்க்கும் உற்சாகம் தரும்.
உழைப்பவரை நாம் ஊக்குவிப்போம். உழைப்பவர்க்கு என்றும் உறுதுணையாவோம். உழைப்பின் அருமை , பெருமைகளை
உலகோர் உணரச் செய்திடுவோம்.
உழைத்தால்தானே உணவு கிடைக்கும் . உழைத்தால்தானே உடை கிடைக்கும் .. உழைத்தால்தானே உறைவிடம் கிடைக்கும் .உழைத்தால்தானே உறுபொருள் கிடைக்கும். உழைத்தால்தானே உயர்நிலை கிடைக்கும்.
உழைத்துப் பிழைப்பதே தன்மானம் . – பிறர் உழைப்பில் வாழ்வது அவமானம் . உழைப்போர் உழைப்பைப் பாராட்டுவதே உழைப்போர்க்கு தரும் வெகுமானம்.
உழைப்பவரைப் பாராட்டிடுவோம். உழைப்பவரை என்றும் வாழ்த்திடுவோம். உழைப்பவரை நாம் வணங்கிடுவோம். உழைப்பாளர் தினத்தில் மட்டுமல்ல உலகம் உள்ளளவுமே உளமாரவே . .
உள்ளன்புடன், சிலேடை சித்தர் சேது சுப்ரமணியம்