உலக சுகாதார தின வாழ்த்துக்கள்
உலக சுகாதார தின வாழ்த்துக்கள்- 7.4.2022
சுகத்திற்கு ஆதாரம் என்பதனாலன்றோ சுகாதாரம் என்று சொல்லிவைத்தார் முன்னோர் .சுகாதாரத்திற்காதாரம் எதுவென்று நோக்கின் சுத்தம் பேணுதலே தலையாயதாகும்.
உடற் சுத்தம் பேணுதல் புறச்சுத்தமாகும். உணவு சுத்தம் பேணுதல் உறுநோய் தடுக்கும். உறைவிடச் சுத்தம் நல் உற்சாகம் நல்கும். உணர்ந்திதனைக் கடைபிடித்தல் உத்தமமாகும் .
சுற்றுப்புறச் சுத்தம் சூழலை மேம்படுத்தும். தொற்றுப் பரவுதலைத் தவிர்க்கும் வழியாகும் . பொது இடத்தில் சிறுநீர் ,மலம் கழித்தல் தவிர்ப்போம். எச்சில் துப்புதலை எந்நாளும் தவிர்ப்போம். நீர் நிலைகளை மாசு நிர்மூலமாக்கும். நிலத்தின் மாசு நல்ல விளைச்சலை பாதிக்கும். காற்றின் மாசு நம்மை மூச்சிரைக்க வைக்கும். இம்மூன்றையும் காத்தல் , இன்பத்தை அளிக்கும். .
புறச்சுத்தம் பேணுதலால் , பொதுநன்மை பெருகும். அகச்சுத்தம் பேணுவது அனைவ்ருக்கும் நலமாம் . வாய்மை , நேர்மை, அன்பு , பண்பெனும் நான்கும் தூய்மையாய் உறவுகள் துலங்கிட வைக்கும்…அகச்சுத்தம் , புறச்சுத்தம் அக்கறையாய்ப் பேணுதல் அகிலத்தில் வாழ்வதனை .ஆனந்தமாக்கும்.
சுத்தம் சுகம் தரும் , சுத்தம் சோறுபோடும் என்பது சத்தியவாக்கென்று , நித்தம் கடைபிடிப்போம்.
அன்புடன் சிலேடை சித்தர் சேது சுப்ரமணியம்