இளையான்குடி கல்லூரி நிர்வாகக் குழு பதவியேற்பு விழா
இளையான்குடி :
இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியின் புதிய நிர்வாகக் குழு
பதவியேற்பு விழா 03.01.2021 ஞாயிற்றுக்கிழமை காலை நடந்தது.
தொடக்கமாக கல்லூரி ஆட்சிக்குழு தலைவர் அல்ஹாஜ் ஏ. முஹம்மது சுபைர்
இறைவசனங்களை ஓதி விழாவை தொடங்கி வைத்தார்.
இந்த விழாவுக்கு துகவூர் சிவ மாதவன் தலைமை வகித்தார்.
கல்லூரி முதல்வர் முனைவர் ஏ. அப்பாஸ் மந்திரி வரவேற்புரை நிகழ்த்தினார்.
அதன் பின்னர் புதிய நிர்வாகக் குழுவினருக்கு கல்லூரி முதல்வர்
ஆசிரியர்கள் சார்பில் பொன்னாடை அணிவித்து கவுரவித்தார்.
தமிழ்த்துறை பேராசிரியர் முனைவர் இப்ராஹிம் வாழ்த்துரை வழங்கினார்.
கல்லூரி செயலராக மீண்டும் தேர்வு செய்யப்பட்ட வி.எம். ஜபருல்லா கான் ஏற்புரை நிகழ்த்தினார்.
ஆட்சிக்குழு உறுப்பினர் ஜெ. அபுபக்கர் சித்திக் நன்றியுரை நிகழ்த்தினார்.
கல்லூரி தலைவர், செயலர், பொருளாளர் உள்ளிட்ட 11 பேர் கொண்ட புதிய நிர்வாகக் குழுவினர்
பொறுப்பேற்றுக் கொண்டனர்.
அனைத்து ஜமாஅத்தார்கள், முக்கிய பிரமுகர்கள் சார்பில் புதிய நிர்வாகக் குழுவினர்
பொன்னாடை அணிவித்து கவுரவிக்கப்பட்டனர்.
இந்த விழாவில் கல்லூரியின் ஐக்கிய அரபு அமீரக முன்னாள் சஙக நிர்வாகி முதுவை ஹிதாயத்
உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழா நிகழ்ச்சியினை தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர்