வலிக்கச் சுடும் மழைக்காலம்..

Vinkmag ad
வலிக்கச் சுடும் மழைக்காலம்.. (கவிதை) வித்யாசாகர்!
ழைக்காலம்
மரணத்தின் வாசம்
மணற்தடமெங்கும்
மரக்கட்டை சாபம்;

ழைக்காலம்
மரண ஓலம்
குளங்குட்டை தோறும்
தவளைகள் ஏலம்;

ழைக்காலம்
பூக்களெல்லாம் பாவம்
உதிர்ந்து நனைந்து
உயிரோடு சாகும்;

ழைக்காலம்
மின்கம்பி அறும்
மின்வெட்டிற்கு முன்பாக
காகத்தின் சிறகெரியும்;

ழைக்காலம்
துண்டுதுண்டாய்ப் போகும்
மண்ணுக்குச் சாமி
மண்புழு மழைநீரில் நாறும்;

ழைக்காலம்
மாடும் கன்றும் – வெளியே
கொசு கடிக்க வாழும்,
கரந்தப் பாலில் மனிதம் சர்க்கரையால் இனிக்கும்;

ழைக்காலம்

கூரைகள் ஒழுகும்
ஈரவிறகில் சிறுமியின்
பசிகூடப் புகையும்,

ழைக்காலம்
மண்ணெண்ணையில் நெருப்பு வாங்கி
அவசரமாய் உலை கொதிக்கும்,
போதாத அரிசியால் சாதம்
கேட்காமலே கஞ்சாகக் குழையும்;

ழைக்காலம்
மாடிவீட்டில் வரும்போது
வசந்தமாகவே உள்ளேவரும்,
கூரைக்குள் மட்டுந்தானோ
காய்ச்சலாகக் கொதிகொதிக்கும்;

மருந்துவாங்கக் கண்ணீர்
யாசகமும் கேட்டுநிற்கும்
கூடிப்போகும் வட்டிக்கடனில்
இருக்குமுயிரை மெல்லவிடும்;

பாரபட்சத்தால் இயற்கையின்
புனிதம்கூட பூதமாகும்,
மழை பெய்யப் பெய்ய – ஈரத்தில்
மனசாட்சி மிகநன்றாக வேகும்!!

வித்யாசாகர்

————————————————————————
வலைதளம்: www.vidhyasaagar.com/about/
தொலைபேசி எண்: +965 67077302, +919840502376
விலாசம்: 
11, சூர்யா தோட்டம், குதிரை குத்தி தாழை
மாதவரம் பால்பண்ணை, சென்னை, தமிழ்நாடு – 51
இயற்கையை காப்போம்; இயற்கை நம்மைக் காக்கும்!!

News

Read Previous

கிளிப்பேச்சு – தொகுதி 2

Read Next

கருணாநிதி பற்றி அண்ணா

Leave a Reply

Your email address will not be published.