யார் இவர் ? !
யார் இவர் ? !
” தமிழைப் பழித்தவனை என்தாய் தடுத்தாலும் விடேன்
எதிரிகள் கோடி இட்டு அழைத்தாலும் தொடேன் “
வஞ்சினம் கூறிய வாதில்புலவன் பாவேந்தர்
வழிவந்த மறவன் தமிழ்அறம்பாடி வந்தஅறிஞன் !
சங்கத்துமது ரையில்தமிழைப் பங்கப்படுத்திப் பேசிய
ஓங்குபுகழ் அறிஞரெனினும் ஒவ்வாதசொல் லைத்தாங்காது
தமிழைப் பழித்தவர்க்கு தக்கறிவூட்டி கருத்தினை
உமிழ்ந்து தள்ளியதற்கு ஓர்சான்று உண்டன்றோ !
விடுதலையான நம்நாட்டில் கெடுதலையேதரும் பொருள்நிலையை சடுதில்மாற்றி நம்நாடு சமநிலைகாண நிதிஅமைச்சராகவும்
சர்ச்சிலொடு வாதிட்டுவென்று ‘சர்பட்டம் ‘ பெற்ற ஆர். கே.எசு.
சண்முகம் அவர்கள் புன்முகம்காட்டி பொழிந்தசொல் 1
ஆங்கில மொழியில் ஓங்குபுகழ் ஒலிக்குறிப்புபோல்
பாங்கான தமிழில் யாங்கனும்இல்லை யென்றதற்கு
தூங்கும் தமிழ்ப்புலியை தீண்டியதற்கு ஒப்ப
ஓங்கும் தமிழ்ச்சான்றை ஓராயிரம் சுட்டிக்காட்டி
வாயை அடக்கினார் வாய்மைமேடு இலக்குவனார்
தாயின் சொல்லுக்கு சேய்அடங்கும் தன்மையாகஅறிவை
மேயவந்த அவையே மூச்சடங்கிப் போனதுகாண்!
வாய்திறந்த சொன்னஆர். கே .எசு. மெய்விதிர்த்துப் போனார் !
அணுக்கத் தொண்டன்
மா. கந்தையா – செயா மதுரை
Tags: யார்