மேதை அப்துல் கலாம் வாழ்க!
மேதை அப்துல்கலாம் வாழ்க!
============================== ======ருத்ரா
நினைவு நாள் எனும்
நினைக்கப்பட வேண்டிய நாளில்
வினாடிகள் கூட
வழி பிளந்து
ஒரு யுகத்தின் முகம் காட்டச்செய்த
பெரியோன் திரு அப்துல் கலாம்
அவர்களுக்கு நம் வணக்கங்கள்.
காலம் என்பதை இழையாக்கி
தன் எண்ணத்துள்
அதை வார்த்து வளர்த்து
அதன் “அக்கினிச்சிறகில்”
அகிலம் அனைத்துக்கும்
சுடரேற்றியவர்
நம் அருமை அப்துல் கலாம் அவர்கள்.
நினைக்கப்படும் நிகழ்வின் அடுக்குகளிலேயே
மறக்கப்படும் நிகழ்வுகளும் செருகப்பட்டிருக்கும்.
ஆனால்
அவர் வாழ்க்கைப் புத்தகத்தில்
எந்தப்பக்கத்திலும்
அறிவின் தேடல் மட்டுமே
உரசிக்கொண்டே நெருப்புப்பொறி பறக்கும்.
மானிடநேயம் வருடிய
அவர் சிந்தனைப்பாடுகளில்
மத மொழி இனம் எனும்
குறுக்கு சால்கள் ஓடியதே இல்லை.
இதோ இந்த
உலகமானிடனுக்கு
ஒரு மலர்ச்செண்டு.
நம் இதயங்கள் கொண்டு
கோர்த்து தந்தது.
மேதை அப்துல்கலாம் வாழ்க!