மாமனிதர் நபிகளார் முஹம்மத் (ஸல்)

Vinkmag ad
அல்லாஹ் வழங்கிய அருட்கொடை
அகிலத்தின் அனைத்து வினாக்கட்கும் முஹம்மத்(ஸல்)
அவர்களின் வாழ்வுதான் ஒருவிடை
 
 
அள்ளக் குறையாப் பாத்திரம்
அறியாமை நிறைந்திருந்த அற்றைப் பொழுதினில்
அறிவை வளர்த்த சூட்சமம்
 
 
பணிவு என்பதன் பொருளாக
பண்பகராதியில் முஹம்மத்(ஸல்) என்றே உணரப்படும்
படைத்தோன் தந்த அருளாக
 
 
அத்தனை துறையிலும் வென்றார்
அதனாற்றான் உலகத்தில் உயர்ந்தவர்கள் பட்டியலில்
முதன்மை இடத்தில்  நின்றார்
 
 
அண்ணலின் சீரிய தலைமை
அரபகத்தில் வியாபித்த கொடுமைகளை முற்றிலுமாகத்
துடைத்துப் போட்ட நிலைமை
 
அண்ணலின் பொன்மொழி கற்போம்
அயராமல் நேர் வழியைப் பின்பற்றி ஈருலகில்
வெல்ல உறுதியாய் நிற்போம்!
-அதிரை கவியன்பன் கலாம், அபுதாபி

News

Read Previous

உலகத் திருக்குறள் பேரவை நடத்தும் கட்டுரை மற்றும் கவிதை போட்டி

Read Next

வானத்தின் கீழேதான் வாழ்கிறோம்

Leave a Reply

Your email address will not be published.