மலை மக்களின் மனசு !
மலை மக்களின் மனசு !
“”””””””””””””””””””””””””””
மனசுக்குள்ள பாரம்
இறக்கி வைக்கனும்.
வாய் விட்டு
சொல்ல வார்த்தை
தெரியலையே …
அழுதா பாரம்
குறையுமுன்னு சொன்னாங்க.
அழுவது கோழையின்
செயல்னும் நினைச்சு
அழாமல் அழுகிறேனே..
ஆறுதல் சொல்வது
யாரென்று பார்த்தா
அதுவும் நானே
அடுத்து சிந்திச்சு
செயலில் இறங்கிட்டேன்.
அடுத்து வரும்
பொழுது,எல்லாம்
என்னின் உடைமையே..
ஆட்சி அதிகாரம்
இளைஞர்கள் கையிலே ..
நாட்டை பற்றிய
கவலை எல்லாம்
மாயமா மறைந்திடுமே..
நாளும் கொண்டாட்டம் தான்
வன்முறை நிகழாது தான்
பிரித்தாளும் சூழ்ச்சிய
புரிந்து கொண்டா
மக்கள் எல்லாரும்
ஒற்றுமையா இருப்பாங்க தான்.
தஞ்சை.ந.இராமதாசு
13.08.2023