பொங்கல் நல்வாழ்த்துக்கள்
பொங்கல் நல்வாழ்த்துக்கள் கவிதை
——————————
உழைத்திட பொங்கிடு உரிமைக்கு பொங்கிடு
உதவிட பொங்கிடு ஊருக்கு பொங்கிடு
தழைத்திட பொங்கிடு தமிழென பொங்கிடு
தர்மத்தைப் பொங்கிடு தளராது பொங்கிடு
பிழையற பொங்கிடு பெருமையாய் பொங்கிடு
பிணக்கிலா பொங்கிடு பார்போற்ற பொங்கிடு
மழையென பொங்கிடு மலரென பொங்கிடு
மதமிலா பொங்கிடு மனிதனாய் பொங்கிடு
இயற்கையோடு பொங்கிடு இரக்கதோடு பொங்கிடு
இணக்கமென பொங்கிடு எழிலாக பொங்கிடு
தயங்காமல் பொங்கிடு தவறாது பொங்கிடு
தடுக்காமல் பொங்கிடு தணிந்திட பொங்கிடு
வியந்திட பொங்கிடு விடுதலைக்கு பொங்கிடு
வேளாண்மை பொங்கிடு வெற்றியால் பொங்கிடு
சுயமாக பொங்கிடு சுடரொளிக்க பொங்கிடு
சுகமென பொங்கிடு சுபமென பொங்கிடு
நாட்டுயர்வை பொங்கிடு நற்தமிழைப் பொங்கிடு
நயமுடன் பொங்கிடு நல்லதைப் பொங்கிடு
கூட்டுறவை பொங்கிடு கொள்கையெனப் பொங்கிடு
குற்றமின்றி பொங்கிடு குலையாது பொங்கிடு
வாட்டமிலா பொங்கிடு வனப்போடு பொங்கிடு
வறுமைதீர பொங்கிடு வலிமையோடு பொங்கிடு
மாட்டோடு பொங்கிடு மஞ்சுவிரட்டி பொங்கிடு
மண்மணக்க பொங்கிடு மாறாமல் பொங்கிடு
-ப.கண்ணன்சேகர். திமிரி. செல்:9698890108.