நினைத்தாலே இனிப்பவள் நீ..

Vinkmag ad

நினைத்தாலே இனிப்பவள் நீ.. (கவிதை) வித்யாசாகர்

 

1

னக்குத் தெரியுமா
எனக்கு
இப்போதெல்லாம்
போதை நிறைய ஏறிக் கிடக்கிறது

வெறும்
நீயெனும் போதை..
————————————————————————

2

னக்குத் தூக்கத்தில்
வரும் கனவும்
எனக்கு வரும் கனவும்
ஒன்று தான்;

நீ எனக்குச் சொல்லாததும்
நானுனக்குச் சொல்லாததும் அது..
————————————————————————

3

கைக்குட்டையை கொடுத்து
மடித்து வைத்துக் கொள்
என்றாய்..

எனக்குத் தெரியும்
நீ எதையோ கொடுக்கிறாய்
எதையோ என்னுள் புதைக்கிறாய்

அதை நான்
பத்திரமாக வைத்திருப்பேன்

ஒரு முறை மறுமுறை என்று
சிமிட்டிக் கொள்ளும் இமைகளுள்
நீ கொடுத்த கைக்குட்டையும்
அதோடு மடிந்துக் கிடக்கும் நீயும்

மிக பத்திரமாகயிருக்கும்..
————————————————————————

4

ல்லோரிடமும்
போய் வருகிறேன்
போய் வருகிறேன்
என்றேன்
உன்னிடமும் சொன்னேன்

நீ போ என்கிறாய்
கண்கள் போகாதே என்கிறது,
நானும் போகிறேன் என்கிறேன்
மனசு உன்னோடே நிற்கிறது..

வேறென்ன செய்ய
ஒரு கணத்தில் எப்படியோ
அங்கிருந்து வந்துவிடுகிறேன்
உன்னிடமிருந்து மனசு வந்ததேயில்லை..
————————————————————————
வித்யாசாகர்

News

Read Previous

“கொள்ளை’ போகும் கூகுள் கணக்குகள்: பாதுகாப்பது எப்படி?

Read Next

இடி, மின்னல் தாக்கியதில் கூலித் தொழிலாளி சாவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *