இடி, மின்னல் தாக்கியதில் கூலித் தொழிலாளி சாவு
முதுகுளத்தூர் அருகே இடி, மின்னல் தாக்கியதில் கூலித் தொழிலாளரி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
முதுகுளத்தூர் அருகே உள்ள வெங்கலக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் கூரி(50). கூலித் தொழிலாளியான இவர், யாதவர் வாக்குளத்தில் ஒரு வீட்டின் மேல் பகுதியில் ஹாஸ்பெட்டாஸ் பொருத்திக் கொண்டிருந்தார். சாரல் மழை பெய்த நிலையில் திடீரென இடி, மின்னல் தாக்கியதில் அவர் மயங்கி கீழே விழுந்தார். அவரை முதுகுளத்தூர் அரசு மருத்துவமனைக் கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.
முதுகுளத்தூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.