நான் நீ நாம்
நான் நீ நாம்
நான்
என்ற சொல்
நாவினில் விதைக்காதீர்
நாம்
என்ற சொல்
நாவினில் விதையுங்கள்
நான் என்ற பாரம்
தலைக்கு ஏற்றினால்
வீழ்வது
நாம் இல்லை
நீ என்பதை உலகம்
இன்னும் உணரவில்லை
நான் என்ற சொல்
உதட்டைப் பிரிக்கும்
பகைக்காரன்
நாம் என்ற சொல்
உதட்டை இணைக்கும்
ஒற்றுமைக்காரன்
நான் என்றால்
மனிதர்களின்
ஆங்காரம்
நாம் என்றால்
மனிதன் அறிவின்
அலங்காரம்
நான் என்றால்
பகையின் அடையாளம்
நாம் என்றால்
ஒற்றுமையின்
சின்னம்
நான் என்றால்
இமைகள் கூட
பிரிந்து இருக்கும்
நாம் என்றால்
இமைகளும் அழகாய்
உறங்கும்
நான் அடையாளம்
மனிதன் பிரிந்து கிடக்கிறான்
நாம் என்ற
அடையாளம்தான்
பட்சிகளின் ஒற்றுமையின்
சிகரமாய் விளங்குகிறது
நான் என்றால்
இல்லறம் கசக்கும்
நாம் என்றால்
இல்லறம் இனிக்கும்
நான் என்ற சொல்
குத்துப்பட்டு கிடக்கும்
நாம் என்ற சொல்
அரவணைத்துக்கொண்டே
இருக்கும்
நான் என்றால்
ஆலமரம் கூட வீழ்ந்திருக்கும்
நாம் என்றதனால்தான்
மரம் செடி கொடி காய் கனி என
விருட்சம் பெறுகிறது
விருட்சம் பெறுகிறது
என்றும் அன்புடன்.
ரா. .ந.ஜெயராமன் ஆனந்தி
கீழப்பெரம்பலூர்