மாரி…!
மாரி…!
மேகச் சுருள் முடி சிலுப்பி
மின்னல் மீசை முறுக்கி
பெருஞ்சத்தம் கிளப்பி
ஊருக்குள் வருகிறான்
இவன் வந்தால் ஊரே ‘நடுங்கும்’
பாறையின் இடுக்கு தேடி
பயந்து ஓடும் தேரையாய்
நம்மை ஓட ஓட விரட்டுவான்
அடித்தால் அது இடி தான்!
ஆனால் குழந்தைகள் கண்டால்
கொள்ளை பிரியம் !
சொத்துக்களை ‘சூறையாடல்’
‘குண்டு’ குழி செய்து
‘வழி பறித்தல்’ இவன் தொழில்!
இதனால் பாதிக்கப்படும் நம்
‘மாமூல்’
வாழ.க்கை!
சாரை சாரையாய் பொழிந்து
கத்தி வீசுவான்!
இவன் வீரமாரி இல்லை
ஈரமாரி அதனால் இவன்
வேற மாரி …!
-அப்துல் வதூத், துபாய்
Tags: மாரி