நபி (ஸல்) …………….
நபி (ஸல்) அவர்கள் பிறந்தார்கள்
திருச்சி A .முஹம்மது அபூதாஹிர் தோஹா – கத்தர் thahiruae@gmail.com
|
- அங்கே
ஒவ்வொருவருக்கும்
ஒரு குல வழிபாடு இருந்தது!
ஆம்
அங்கே
பல தெய்வ வழிபாடு இருந்தது!
- கவிஞர்கள்
அங்கே அன்பை பேசவில்லை!
அம்பு வீச சொன்னார்கள் !
படிக்க சொல்லவில்லை!
குடிக்க சொன்னார்கள் !
மதி வளர்க்கச் சொல்லவில்லை
மது குடிக்கச் சொன்னார்கள்!
- அந்தப் புரங்கள்தான்
நகர்புறங்களை விட
வளர்ச்சிப் பெற்றிருந்தன!
- பேரரசுகள்
மக்களின் வாழ்க்கையைப்பற்றி
கவலைப்படவில்லை !
அவர்களிடம்
வாள் கையில்
எப்போதும் இருந்தது !
- வேட்டையாடுவது
அவர்களின் வீரத்தைக் குறிக்கும் !
கோட்டையில் கும்மாளமிடுவது
இதயத்தில் ஈரத்தைக் குறிக்கும் !
- பக்கத்து நாடு
எப்போதும் பகை நாடு !
படையெடுப்பது
அவர்களுக்கு உடையேடுப்பது போல !
- கவிஞர்களின்
வைரவரிகள் !
அரசர்களின்
வைரங்களுக்காக எழுதப்பட்ட வரிகள் !
- அறிஞர்களின்
பொன் வரிகள்!
அரசர்களின் பொன்னுக்காக எழுதப்பட்ட வரிகள் !
- யூத சமூகம்
மனித குல விரோத சமூகமாக இருந்தது !
- மதகுருமார்கள்
படிச்சுக் கொடுத்ததை விட
முடிச்சுப் போட்டதுதான் அதிகம் !
மக்களின் உழைப்பு !
அவர்களின் வயிற்றுப் பிழைப்பு !
- மக்கள்
மனோதிடத்தை விட
ஜோதிடத்தின் மீதுதான் நம்பிக்கை வைத்திருந்தனர்!
எச்செயலையும் நெறிப்பார்த்து அல்ல
“குறி “ பார்த்தே தொடங்கினர் !
- வேதங்கள்
முடிந்த அளவு திருத்தப்பட்டது !
மதகுருமார்களுக்கு
வேண்டியது சேர்க்கப்பட்டது !
- உண்மை சொல்ல வேண்டிய வேதங்கள்
பொய் சொல்ல ஆரம்பித்தன!
பொய்யை உண்மையென்று
ஆலயங்கள் அங்கீகரித்தன !
- கருப்பு நிறம்
வெறுப்பு நிறமாகக் காட்டப்பட்டது !
சிவப்பு நிறம்
சிறப்பான நிறமாகக் காட்டப்பட்டது!
- எங்கும்
சாதி சகதியாய் இருந்தது !
சமூகத்தில்
அநேகருக்கு அவமானமும் அவதியுமாய் இருந்தது !
- விலங்குகளைக்கூட
புனிதமாக கருதினர் !
விளங்காத மனிதர்கள்
தம் இனத்தை இழிவாகக் கருதினர் !
- உயர்ந்த சாதி
பாவங்கள் செய்தாலும் பரிசுத்தம்!
தாழ்ந்த சாதி பிறக்கும் போதே அசுத்தம் !
- விலங்குகளின் சிறுநீர் புனிதம்!
மனித உமிழ் நீர் அசுத்தம்!
இரட்டைக்குவளைகள்!
- அசுத்தப்படுத்தபவர்கள்
சுத்தமானவர்களாம்!
சுத்தப்படுத்தபவர்கள்
அசுத்தமானவர்களாம்!
சாதி கொடுமைகள் !
- ஆசைப்படக்கூடாது என
மதகுருமார்கள் பேசினர்
மக்களிடம் காசை வாங்கிக்கொண்டு!
வேசியிடம் போகக்கூடாது என
அவர்கள் பேசினர்
தாசிகளை வைத்துக் கொண்டு !
- பெத்தெடுக்க தாயாய்
பெண் தேவைப்பட்டாள்!
கணவன் செத்து விட்டால்
தீயில் எறியப் பட்டாள்!
- பெண் குழந்தை பிறந்தவுடன்
தாய்ப்பாலுக்கு பதில்
கள்ளிப்பால் கொடுக்கப் பட்டது !
மண்ணில் வாழவந்த பெண் குழந்தை
உயிரோடு
மண்ணில் புதைக்கப் பட்டது !
- கவிஞர்கள்
பாட்டு அடிகளில்
பெண்ணை நிர்வாணப்படுத்தினர் !
காபாவைச் சுற்றி கடவுளின் பெயரால் ஆடையில்லாமல்
அவளை வரச் செய்து அவமானப்படுத்தினர் !
- ஏழாம் நூற்றாண்டு
எட்டுத்திக்கும்
மகத்தான ஒரு மனிதரின் வருகைக்காக
காத்திருந்தது!
ஏதோ மாற்றாமல்
விட்டு வைக்கப் பட்டிருந்த வேதங்களின் சில பக்கங்கள்
அந்தப் புனிதரின் வருகையை
முன்னே அறிவித்திருந்தன!
- உலகம்
நன்மையைத் தேடிப் புறப்பட்டது !
உண்மையைத் தேடி மனிதர்கள்
அங்கு வந்து கொண்டிருந்தனர் !
- இரத்தங்களாலும் யுத்தங்களாலும்
சிவப்பாயிருந்த பூமி
அமைதியை நோக்கி சிந்திக்க தொடங்கியது!
- அறிவீனத்துடன்
அனைத்துக்கு முன்னும் மண்டியிட்ட சமூகம்
அறிவுப்போருக்கு தயாரானது !
- நரகத்திற்குச் செல்லும் எண்ணிக்கை
பூமியில் குறைய ஆரம்பித்தது !
சுவனம் செல்ல
முன் பதிவுச் செய்யப்பட்டது !
- அழகிய மக்கா நகரம்
ஏகத்துவத்தின் புனர் நிர்மாணத்திற்கு
தயாரானது !
அறியாமக்களால்
வைக்கப்பட்டிருந்த சிலைகள்
அகற்றப்படும் நாள் நெருங்கியது !
- அவரது வருகையை அறிவிக்கவே
நான் வந்தேன் என
இயேசுவின் முன்னறிவிப்பை
பேசத் தொடங்கியது கிறிஸ்தவ சமூகம் !
- உன்னைப்போல் ஒருவரை
பாரான் மலையில் எழுப்புவேன்
சினாய் மலையில் தேவன் மோசேயிடம் பேசியது
சிந்தித்துப் பார்த்தது யூத சமூகம் !
- கிழக்கின் வேதங்களும்
அவரின் அடையாளத்தை
அழகாக பேசின!
ஆழமான பேசின!
- போராட்டங்கள் இல்லாமல்
உலகம் விடுதலைக்குத் தயாரானது!
கோரிக்கை வைக்காமல்
உரிமைகள் அனைவருக்கும் கொடுக்கப்பட போகிறது !
- அரக்கத்தனத்தால்
அடிமைப்படுத்திய அரசர்கள்
அச்சப்பட்டார்கள்
ஆட்சி வீழப் போகிறது என !
மூடத்தனத்தால்
ஏமாற்றிய புரோகிதர்கள்
வயிற்று எரிச்சல் பட்டார்கள்
வயிற்றுப் பிழைப்பு
போகப் போகிறது என !
- இறைத்தூதர் ஈஸா
விண்ணில் ஏற்றப்பட்டு
ஐந்நூறு ஆண்டுகள் கழிந்தது !
இறுதி இறைத்தூதர் முஹம்மது
மண்ணில் தோன்றப்போகும் நாள்
நெருங்கி வந்தது !
- ஆம் !
ரபியுல் அவ்வல் மாதம்
திங்கட்கிழமை காலை
பலித்தது வேதங்களின் முன்னறிவிப்பு
மக்கா மாநகரில்
நிகழ்ந்தது
மாநபி முஹம்மது (ஸல்) அவர்களின்
பிறப்பு !
– தொடரும்
– ******************************************************************************************************