தென்றல் சிறுகதைப் போட்டி

Vinkmag ad
அமெரிக்காவிலிருந்து வெளிவரும் தென்றல் சிறுகதைப் போட்டியை அறிவித்துள்ளது. Inline image 1
இந்தப் போட்டியில் தமிழக எழுத்தாளர்களும் பங்கேற்கலாம் என்பது சிறப்பு. விவரங்கள் கீழே:
தென்றல் சிறுகதை போட்டியை அறிவிப்பதில் மகிழ்ச்சி கொள்கிறது. நடுவர் குழு தேர்ந்தெடுக்கும் சிறந்த மூன்று கதைகளுக்குக் கீழ்க்கண்டவாறு பரிசுகள் உண்டு:
 
முதல் பரிசு: $300
இரண்டாம் பரிசு: $200
மூன்றாம் பரிசு: $100
 
நகைச்சுவை, சமூகம், அலுவலகம், அறிவியல் என்று எதைப்பற்றியும் சிறுகதைகள் எழுதலாம். சிந்திக்கவும் சிரிக்கவும் வைக்கலாம். நல்ல தமிழில் விறுவிறுப்பாக எழுதப்பட வேண்டும். நட்பு, மனிதநேயம், கருணை, உழைப்பு, தியாகம், கொல்லாமை போன்ற உயர்பண்புகளைச் சித்திரிப்பவையாக இருத்தல் நல்லது.
 
மேலும் விவரங்களுக்கு: தென்றல் சிறுகதைப் போட்டி
 
முந்தைய போட்டியில் ஷைலஜா, ஆனந்த் ராகவ் ஆகியோர் பரிசுகள் பெற்றதையும் இங்கே நினைவுகூர விரும்புகிறேன்.
பெரும் எண்ணிக்கையில் பங்கேற்று நல்ல சிறுகதைகளைத் தரவும் பரிசுகள் பெறவும் வேண்டுகிறேன்.
 
நீங்களறிந்த எழுத்தாளர்களுக்கும் இந்தத் தகவலைக் கொண்டு சேர்க்கலாம்.
 
அன்புடன்
மதுரபாரதி
Chief Editor ::: www.Tamilonline.com
Blogs:

News

Read Previous

நபி (ஸல்) …………….

Read Next

தமிழ்நதி.காம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *