தொற்றுகளும் தொல்லைகளும்
மைசூர் இரா.கர்ணன்
சங்கத்தமிழ் இலக்கியப் பூங்கா
தலைப்பு : தொற்றுகளும் தொல்லைகளும்.
⚘
மருத்துவர் சொல்லை மறுக்கவும் இல்லை,
உறுத்தல் தரினும் ஏற்றோம் தொல்லை,
அரசின் அறிக்கை ஆயிரம் வந்தது
சிரசும் பணிந்தோம் சிந்தையில் கொண்டோம்,
அடங்கி வாழ்ந்தோம் அடங்கா பசியில்,
முடங்கிக் கிடந்தோம் முடியா நிலையில்,
ஓட்டுக்கு ஆயிரங்கள் கொடுக்கும் கயமைகள்
வீட்டுக்கு ஒருமுறை வந்ததும் இல்லை..!
வருவது வரட்டும் தருவதை ஏற்போம்,
தவிர்த்திட முடிந்தததை தலையில் கொள்வோம்,
சுருட்டும் கீழ்மைகள் எங்கிலும் உண்டு..!
சோர்ந்தோம் நாமும் நட்ந்தவைகள் கண்டு..!
உதவிடும் உள்ளங்கள் உய்திடும் உலகில்
வருந்திடும் எழையர் அடைவர் அமைதி..!
அருளும் மனிதம் ஆயிரம் உண்டு,
மருளும் மனமே..! எழுந்து நில்லு..!
மைசூர் இரா.கர்ணன்
07.01.2022