தை பொங்கல் வாழ்த்துகள்
தை பொங்கல் வாழ்த்துகள்
“””””””””'””””””””””””””””””””””
உழவர் திருநாள்
உழைத்த உழைப்பால்
அறுவடை செய்த
நெல் மணிகளை,
இல்லம் சேர்த்து
இடித்த அரிசியில்
சர்க்கரை பொங்கல்
வைத்து உண்டு.
மகிழும் திருநாள்!
தை பொங்கல் விழா!
உழவும் தொழிலும்
சிறக்கவே ,உரிய
திட்டம் தீட்டியே
சட்டம் இயற்றியே,
உழைக்கும் மக்களின்
வாழ்வு சிறக்கவே!
நாளும் செயல்படுவோமே!!
இல்லாமை இல்லாத
நிலையை காண்போம்.
உணவு ,உறைவிடம்
உடுத்த ஆடையும்
அனைத்து மக்கள்
பெற்ற வேண்டும்.
ஆளுமை மிக்க
தலைமையில் நாடு
வல்லரசாக உருவாகிடனும்.
அனைத்து மக்களும்
பொங்கல் விழாவை
கொண்டாடி மகிழனும்.
பொங்கல் வாழ்த்துகள்!!
தஞ்சை.ந.இராமதாசு
எழுத்தாளர்