துஆ செய்து வாழ்த்துகிறேன் !

Vinkmag ad

 

 

        ( முதுவை கவிஞர், ஹாஜி, உமர் ஜஹ்பர் )

 

முப்பத்து நாள் தொடர்ந்து முழுதாக நோன்பிருந்து

முறையான பயிற்சியினால் முப்பசியைத் தானறிந்து

அப்பழுக்கு இல்லாத மனிதரெனப் புனிதரென

ஆகிவிட்ட முஃமின்களே ! முஸ்லிம்களே ! உங்களுக்கு

இப்பொழுது இன்பத்தின் எல்லையென மலர்ந்திருக்கும்

ஈதுப்பெருநாள் பிறந்திருக்கும் ! சொர்க்கமது திறந்திருக்கும் !

செப்பியதோர் ரஹ்மத்தும் மஃபிரத்தும் சேர்ந்திருக்கும் !

சங்கைமிகு ஸலாமத்தும் பரக்கத்தும் குவிந்திருக்கும் !

 

 

”ரய்யானின் சொர்க்கபதி அலங்கரித்துக் காத்திருக்கும் !

“ராஹத்தாய் கஸ்தூரி வாசமங்கு கமழ்ந்திருக்கும் !

மெய்யான “ஹூர்” என்னும் சுவனமங்கை சிரித்து நிற்கும் !

மேலான இறையோனின் ‘ரிலா’ பொருத்தம் சிறந்திருக்கும் !

துய்ய மலக் “ரில்வானும்” விழி மலர்ந்து வரவேற்கும் !

தூதர் ஹபீப் “ஷபா அத்தும்” தடையின்றித் தொடர்ந்திருக்கும்

தெய்வீக மார்க்கத்தின் திருக்கடமை நிறைவேற்றித்

திகழ்கின்ற “முத்தக்கீன்” தீனவரே ! வாழ்த்துகிறேன் !

 

 

பகலெல்லாம் பசித்திருந்த உத்தமரே வாழ்த்துகிறேன் !

பண்பாடித் தராவீஹைத் தொழுதவரே வாழ்த்துகிறேன் !

முகமலர தர்மங்கள் ஈந்தவரே வாழ்த்துகிறேன் !

முழுதாக குர்ஆனை முடித்தவரே வாழ்த்துகிறேன் !

இகபரமும் இறையருளைப் பெற்றவரே வாழ்த்துகிறேன் !

இருகரமும் ஏந்தி நின்று “துஆ” செய்து வாழ்த்துகிறேன் !

அகங்குளிர அருள்கோடி வென்றவரே வாழ்த்துகிறேன் !

ஆண்டுபல ரமளானைப் பெற்றிடவே வாழ்த்துகிறேன் !

News

Read Previous

அருளைப் பெற்ற பெருநாள் !

Read Next

தனிப்பெரும் தகுதி பெற்ற நபி

Leave a Reply

Your email address will not be published.