தனிப்பெரும் தகுதி பெற்ற நபி

Vinkmag ad

 

( முதுவைக் கவிஞர் மௌலவி உமர் ஜஹ்பர் )

இருள் சூழ்ந்த உலகினிலே அருள் சேர்க்க வந்த நபி !

இருளான நெஞ்சினிலே ஒளிவார்த்து நின்ற நபி !

அருளான பெருவாழ்வை அகிலத்தில் தந்த நபி !

அல்லாஹ்வின் அருளாக அகிலத்தில் வந்த நபி !

 

 

 

விதவைக்கு மறுவாழ்வை ஒளியாகத் தந்த நபி !

விதவையரை மனம் புரிந்து வழியாக நின்ற நபி !

பதவிக்குப் பணியாமல் துணிவாக வாழ்ந்த நபி !

பகை வந்த போதுமதைப் பண்பாலே வென்ற நபி !

 

 

 

ஆணுக்கும் பெண்ணுக்கும் கற்புண்டு என்ற நபி !

ஆணுக்கும் பெண்ணுக்கும் சொத்துரிமை தந்த நபி !

ஆணுக்கும் பெண்ணுக்கும் சமவுரிமை சொன்ன நபி !

அகிலத்தில் அனைவர்க்கும் சமத்துவத்தை ஈந்த நபி !

 

 

 

கல்விக்குத் துணையாக அரணாக நின்ற நபி !

கற்றோரை மதிப்பது நம் கடமையெனச் சொன்ன நபி !

எல்லோர்க்கும் பொதுவாக இவ்வுலகில் வந்த நபி !

ஏற்றங்கள் எல்லாமும் எல்லோர்க்கும் தந்த நபி !

 

 

 

கறுப்பென்ற சிவப்பென்ற பேதங்கள் தீர்த்த நபி !

கனிவான வாழ்வுக்கு போதங்கள் வார்த்த நபி !

நறுக்கென்று உண்மைகளை நீதமுடன் சொன்ன நபி !

நீதிக்கு பேதங்கள் நீக்கிடவே வாழ்ந்த நபி !

 

 

 

ஏழைக்கும் செல்வர்க்கும் இணைப்புகளைப் போட்ட நபி !

இல்லார்க்கு உள்ளவரை ஈந்திடவே செய்த நபி !

தாழ்வுக்கும் உயர்வுக்கும் தாழ்ப்பாளைப் போட்ட நபி !

தரணியிலே தனிப்பெரிய தகுதியினைப் பெற்ற நபி !

 

News

Read Previous

துஆ செய்து வாழ்த்துகிறேன் !

Read Next

மயிலே ..! வெற்றி மயிலே !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *