தாலாட்டு
தாலாட்டு
“”””””””””””””””
தென்றலின் குளிர் சுகமே
தேன் தமிழ். இன்பமே
கூவும் குயில் இசையை
. கண்மலர்வாய்____
மண்ணும். விண்ணும் (உன்) வசமே
எண்ணமும். செயலும் பொதுநலமே
மானிடம் செழிக்க உழைக்கனுமே
. கண்மலர்வாய்___
மணற்கேணியில் நீருற்றே
மதிநுட்ப களஞ்சியமே
மழையாய் அன்பை மொழியுமே
கண்மலர்வாய்.____
அறிவாற்றல் பெற வேண்டும்
ஆன்றோர் பாராட்டிட வேண்டும்
ஈன்றவர்கள் மனம் குளிர வேண்டும்
கண்மலர்வாய்__
தாய்ப்பாலும். தாலாட்டும் உனக்கு
தங்கமே வைரமே (நீ). எனக்கு
மழலை இன்பமே இணையோ. புவிக்கு
கண்மலர்வாய்__
தஞ்சை.ந.இராமதாசு
எழுத்தாளர்
Tags: தாலாட்டு