குறும்புத்தனம் குடை சாய்ந்ததோ !
கூடிப் பேச உறவுகளற்று போனதோ !
உரிமையோடு பேசிப் பழக !
உடன்பிறப்புக்கள் அற்ற உலகம் ஆனதோ !
உருண்டு புரளும் நிலை வந்ததோ !
இதுவே இன்றைய குழந்தைகளின் நிலைமையோ !
இக்கால நாகரீக வாழ்க்கையின் நடை முறையோ !
கவிஞர் சை. சபிதா பானு
காரைக்குடி