செல்வன் சுஜித்துக்கு அஞ்சலி வெண்பாக்கள்!

Vinkmag ad

செல்வன் சுஜித்துக்கு அஞ்சலி வெண்பாக்கள்!

****************************

 

பச்சிளம் பாலகனைப் பாழ்கிணறு கொண்டதுவே

துச்சமோ இங்குயிர்தான்? சொல்லொணா! – இச்செகத்தில்

உச்சம்பல தொட்டும் உதவாமற் போனதே

சுச்சித்தைக் காப்பதற்கே சொல்!

சொல்லவோர் வார்த்தையிலை சொன்னாலும் தீர்ந்திடுமோ

அல்லல்தான் பெற்ற அன்னையர்க்கே –

அல்லல்போம்

அல்லல்போம் என்றிறைஞ்சி ஆண்டவனை வேண்டுவமே

அல்லல் தொலையட்டும் அங்கு!

அங்கிங்காய் ஆழ்குழாய் ஆழ்துளை மூடிடுக

எங்கும் சிறாரின்பின் செல்கவனம் – மங்கிடாத்

தீண்டும் விதிகண்டே தேம்பாமல் வென்றுமதைத்

தாண்டிடலாம் தூண்டுமதி கொண்டு!

கொண்டுவரும் பூமியிங்கே கொன்றதுவும் நீதியல்லை

பண்டுவளர் நாடிதிலே பைந்தமிழால்! – தொண்டுசெய்வோர்

உண்டெனினும் தோண்டிடவோர் பாதையின்றிப் போயினவே

உன்னுயிரே பாலகனே ஓ!

ஓவென உள்ளமெலாம் புண்ணாகி வெந்தாலும்

வாவென்றால் வாரானே வையமே! – மாவெனும்

கூக்குரலைக் கேட்காயோ? கூற்றவனின் கைகளுனைத்

தாக்கியதால் சேர்ந்தாயோ தாள்?

– சுரேஜமீ

30.10.2019 காலை 7:35

News

Read Previous

நல்வாழ்த்து நான் சொல்வேன்

Read Next

காலடித்தடங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *