கடல்
நீரலைகள் நிலமகளை
..நொடிதோறும் முத்தமிடும்
பேரலையாய்ச் சுழலுகின்றப்
…பொழுதானால் சத்தமிடும்
கவலை கரைசேரக் காணா வழிகள்
அவளை மறக்கவே அன்றாடம் பாக்களில்
மூழ்கிநான் பார்த்தும் முடியாமல் போனதால்
ஆழ்கடல் போல்மனம் ஆச்சு.
ஆர்த்துக் கரையைத் தொடத்தொடத்தான்
……..ஆழி அலைகள் தவழ்ந்திடுதே
சேர்க்கும் உடலின் குருதியெலாம்
.
.
..சேர்ந்த ஓட்டம் உயிரதுவாம்!
அதிரை கவியன்பன் கலாம், அபுதாபி
Tags: கடல்