இயற்கையின் இறைவழிபாடு

Vinkmag ad

இயற்கையின் இறைவழிபாடு – கவிதை

 

வெள்ளை வெண்முகிலே !

துள்ளும் மடமயிலே !!

கொள்ளை போனதுஎன்

உள்ளமுன் அழகினிலே !!!

 

வெண்ணெய் தின்றுவக்கும்

கண்ணன் துயிலிருக்கும்

பெண்மை தலைக்கொண்ட

மென்மை வெண்முகிலே !

 

கருமை நிறங்கொண்ட

திருமால் சேர்ந்தானோ?

வெண்மை நிறம்போய்நீ

கண்மை பூண்டதென்ன?

 

எறியும் மின்னொளியோ(டு)

அறையும் இடியெதற்காம்?

இறைவன் திருவடிக்கோர்

முறைசெய் வழிபாடோ?

 

கண்ணா போற்றியென

மண்ணோர் கைகூப்ப

அளிந்ததே அக்கார்மலை !!

பொழிந்ததே புதுப்பூமழை !!!

 

 

— 

அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்

அருப்புக்கோட்டை.

News

Read Previous

மின்கவி

Read Next

ரத்தம் ஏற்றம் எச்.ஐ.வி தொற்று நடந்தது என்ன???

Leave a Reply

Your email address will not be published.