அப்பா
அப்பா
“””””””””
அம்மா சொல்லி அப்பாவை அறிந்தோம்
அன்று தொடர்ந்த அப்பாஉறவு
எழுத்தறிவித்து வாழ்வில் ஏற்றம் காண
எம்மை ஏற்றிவிடும் ஏணியாய்
எதை கேட்டாலும் வாங்கி தந்து
நமது நலனே உயிராய் கருதி நாளும் உழைத்த
உறவுக்கு பெயர் அப்பா
வியர்வை சிந்தி வளர்த்த அப்பா தான்
காணா வாழ்வின் சிறப்பை தன் மகன் மகிழ்ச்சியுடன் வாழ்வில்
சிறக்க
வாழும் தெய்வமாக காக்கும் அப்பா
வழிகாட்டியாய் திகழ்ந்தவரே அப்பா
உறவும் ஊராரும் மகனைபாராட்டிட
உருகும் மெழுகுவர்த்தியாய் நம்மை
உருவாக்கிய சிற்பியே
நமது அப்பா
தவறு செய்யும் பொழுது
கண்டித்து
சாதிக்கும் பொழுது நம்மை பாராட்டிடும் அப்பா
தனக்கென ஒன்றை விரும்பாதவர் அப்பா
தஞ்சை.ந.இராமதாசு
எழுத்தாளர்
Tags: அப்பா