அன்பே அறம் அதுவே வரம்
அன்பே அறம் அதுவே வரம்
————————————
போதி மரத்தடி புத்தன் அன்று
போதனை ஒன்று சொன்னான்
அன்பே மண்ணின் அறம்
அதுவே மாந்தருக்கு வரம் என்றான்
பிறருக்கு துன்பம் இழைக்காதே
பின்னாளில் அது உன்னை வதைக்கும்
பிறெற்கின்னா நீசெய்தால் அது புத்த
பிட்சுகளைத்தான் திருப்பித் தாக்கும்
இலங்கையில் நடப்பதென்ன
இனப்படுகொலை தவிர வேறென்ன
இஸ்லாமிய பள்ளிகளை சூறையாடி
இயல்பு வாழ்வை சிதைத்தது தானே
இதையா புத்தர் போதித்தார்
இனியாவது சிந்திப்பீரா சிங்களரே
இணைந்து ஒன்றாய் வாழ்ந்த காலம்
இனிதாய் நினைவில் நிழலாடுகிறதே
விதையை வினையாய் விதைத்து விட்டு
விபரீதங்கள் பல செய்து விட்டு
விதியின் விளையாட்டு என்று
வீணே அதை நொந்து என்ன பயன்
சூழ்ச்சி வலை பின்னியது யாரோ
சூழ்நிலை கைதிகள் தான் யாரோ
செய்தவர் யாரென ஆராயாமல்
செந்தீயில் பலரை வதைப்பதேனோ
உள்ளங்களில் வஞ்சம் கொண்டு
உண்மை எது என உணராமல்
ஏனிந்த வெறியாட்டம் இதைவிடுத்து
என்றும் போல் ஒன்றாய் வாழ்வோமே
மு. முகமது யூசுப் உடன்குடி