பூப் பூவாய்ப் பூத்திருக்கு பூவுலகில்….!!

Vinkmag ad

படைத்தவன் படைத்த

 பாமாலை

 பாரெங்கும் பூத்திருக்கும்

  பூஞ்சோலை

கருப்பையின் கதகதப்பு

 அன்னையின் அரவணைப்பு

 அத்தனையும் வாடாத பூ

மனைவியின் இதழ்

 மலரும் சிரிப்பு

 மாதுளையின் பூ

 கன்னச் சிவப்பு

கவரும் ரோசாப் பூ

மழலையின்

மாசிலாப் புன்சிரிப்பு

மல்லிகைப் பூ

நண்பனின் நட்பு

 நாளும் பாதுகாப்பு

அரிதாய்ப் பூக்கும்

 குறிஞ்சிப் பூ

உறவுகள் என்பது

கதம்பப் பூ

அத்தனைக்கும்

 ஆணிவேர் அன்பு

ஆனால்,

கல்லின் மீது

 பூ வீசியவர்கள்

முதன் முதலாய்

 ஒரு பூவின் மீது

 கல்வீசினார்கள்

 தாய்ஃப் நகரத்தில்

பூவொன்று

 புயலானாதால்

 வெறுப்பு

அப்பூவே

கற்களை

வீழ்த்தியதும்

பெரும் வியப்பு..!!

மக்கத்தில் பிறந்து

மதீனத்தில் மறைந்த

இறைவனின்

அருட்கொடை பூ

அரசியலார் அள்ளி வீசும்

 வாக்குறுதி காகிதப் பூ

என்று மினிக்கும் இலக்கியம் போலவே

தென்றலும் பூவாசம் தூவிட- நன்றாய்

அகத்தி லிறங்கிடும் அப்பொழுதில் பூவின்

சுகந்தம் தருமே சுகம்.

அபுல்கலாம்(த/பெ. ஷைக் அப்துல்காதிர்)

(‘”கவியன்பன் கலாம்,)

 அலை பேசி: 050-8351499

அதிராம்பட்டினம்(பிறப்பிடம்)

அபுதபி (இருப்பிடம்)

மின்னஞ்சல்: kalamkader2@gmail.comkalaamkathir7@gmail.com

News

Read Previous

படிப்பில் வேண்டும் பிடிப்பு

Read Next

செசல்ஸ் நாட்டில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் தமிழக இளைஞர் மூன்றாம் இடம் பெற்றார்

Leave a Reply

Your email address will not be published.