படிக்க வேண்டிய வயதில் இந்த இளம் பெண்ணுக்கு இந்த வேலையா….?

Vinkmag ad
படிக்க வேண்டிய வயதில் இந்த இளம் பெண்ணுக்கு இந்த வேலையா….?சிறுகதை அவசியம் படியுங்கள்!
பசுமை நிறைந்த வயல் பரப்பின் ஓரமாக நடந்து கொண்டிருந்த 25 வயது மதிக்கத்தக்க இளம் வாலிபன் அங்கிருந்த தென்னை மரங்கள் நிறைந்த தோப்பில் நடந்த காட்சியை கண்டு திடுக்கிட்டான்.
பசுமையை போர்வையாய் போர்த்திக்கொண்ட அந்த சிறிய கிராமத்தின் அழகு தேவதையாய் 18 வயதே நிரம்பிய மங்கை ஒருத்தி தென்னை மரங்களுக்கிடையில் முன்னே நடக்க வயதான ஆண்கள் அனைவரும் அவள் பின்னே நடக்கின்றனர்.
அந்த மங்கையை பின் தொடரும் ஆடவர்கள் தோட்டத்தில் உள்ள பம்புசெட் தண்ணீர் தொட்டிக்கு அருகில் அமர்ந்து கொண்டனர்.
ஒவ்வொருவராக அழைத்து அந்த வயதான ஆண்களுக்கு இந்த இளம் பெண் குளிப்பாட்டி விடுகிறாள்.தானாக குளிக்க முடியாமல் பிறரின் உதவியோடு குளிக்க வேண்டிய முதியவர்களே அதிகம் காணப்பட்டனர்.
ஒவ்வொருவரும் குறிப்பிட்ட தொகையை கட்டணமாக அவளது கையில் திணித்து விட்டு செல்லும் காட்சியையும்,அந்த இளம் பெண்ணையும் தூரத்தில் நின்று கவனித்து வந்த இந்த வாலிபன் பரிதாபப்பட்டு அவளை பற்றி தெரிந்து கொள்ள விரும்புகிறான்.
எல்லோரும் சென்ற பிறகு அவளருகில் சென்ற வாலிபன் அவளை பற்றியும் அவளது குளிப்பாட்டு தொழிலை பற்றியும் விசாரித்த போது அவள் கூறிய தகவல் கேட்டு அதிர்ந்து நிற்கிறான்.
தான் பனிரெண்டாம் வகுப்பு வரை படித்திருப்பதாகவும் மேற்கொண்டு உயர் வகுப்பு படிக்க விரும்பியதாகவும் அதற்கு தனது தாய்மாமன்(முறை மாப்பிள்ளை)எதிர்ப்பு தெரிவித்து குடும்பத்தின் வருவாய்க்காக இந்த குளிப்பாட்டு தொழிலில் தன்னை ஈடுபடுத்தி இருப்பதாகவும் கூறிய இளம்பெண்ணின் கண்களில் இருந்து வழிந்தோடிய கண்ணீர் துளிகளை கண்ட வாலிபனின் உள்ளம் உருகியது.
இவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருக்கும் காட்சியை தூரத்தில் இருந்து வந்து கொண்டிருந்த அந்த முறுக்கு மீசை தாய்மாமன் பார்த்து விடுகிறான்.
ஓடோடி வந்த அந்த தாய்மாமன் இந்த வாலிபனை கண்டதும் என் முறைப்பெண்னை நீ எப்படி காதலிக்கலாம்?
இவளுக்கு ஆசை வார்த்தை சொல்லி ஊரை விட்டு ஓடி போகவா திட்டமிடுகிறாய் என்று வாய்க்கு வந்தபடியெல்லாம் ஏசிக்கொண்டே தோட்டத்தில் கிடந்த மம்மட்டியை தூக்கி இவனை வெட்ட வரும் போது குறுக்கே நிற்கிறாள் அந்த இளம்பெண்.
மாமா,இவனை யாரென்றே எனக்கு தெரியாது.இவனை நான் முன்னே பின்னே பார்த்ததும் கிடையாது.ஒரு இளம் வாலிபன் எனது தொழிலை கண்டு என் மீது பச்சதாபப்பட்டு கேட்ட போது,விருப்பமில்லாமல் செய்து வரும் எனது தொழில் பற்றியும் எனது படிப்பின் மீதான ஆர்வம்  பற்றியும் சொல்லி என்மனதில் இருந்த பாரத்தை இறக்கி வைத்தேன் அவ்வளவு தான் என்றாள்.
ஆனாலும் அமைதியாகாத அந்த முறுக்கு மீசை தாய்மாமன் அந்த வாலிபனை கொலை செய்வதிலேயே குறியாக இருந்தான்.
ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த அந்த வாலிபன் யோவ்,பார்த்ததும் காதல் வந்து விடும் என நினைக்கும் உனது ஆதிக்க வர்க்க புத்தியை முதலில் மம்மட்டியால் வெட்டி புதை.
படிக்க வேண்டிய இந்த பெண்ணை குளிப்பாட்டு தொழிலில் ஈடுபடுத்தி நீயும் உட்கார்ந்து சாப்பிடும் கேவலமான எண்ணத்தை உனது மம்மட்டியால் வெட்டி புதை.
என்னதான் இவள் உனக்கு முறைப்பெண்ணாக இருந்தாலும் அவளுக்குள்ளும் சில லட்சியங்களும் எதிர்பார்ப்புகளும் இருக்கும் என்ற உண்மையை புரிந்து கொள்ள முடியாத உனது அறியாமையை வெட்டி புதை.பிறகு என்னை வெட்ட வா என்று கர்ஜித்தான் அந்த வாலிபன்.
அடுத்து என்ன நடக்க போகுதோ?னு ஆர்வத்தோடு காத்திருக்கும் நேரத்தில் சுபுஹுக்கான அலாரம் அடித்ததும் கண் விழித்து விட்டேன்.நம்புங்கள் மேலே கூறியுள்ள அனைத்தும் நான் எனது கனவில் கண்டது.
நான் கண்ட கனவின் காட்சிகள் அனைத்தையும் ஒரு பதிவாக்கிட வேண்டுமென்ற எனது ஆசையும் நிறைவேறி விட்டது.
-கீழை ஜஹாங்கீர் அரூஸி.

News

Read Previous

கர்ச்சிக்கும் சிங்கத்தினையும் எதிர்கொள்ளும் வழிகள்

Read Next

வருமுன் காப்போம்!

Leave a Reply

Your email address will not be published.