ராமநாதபுரம் மாவட்டத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வழிகாட்டு நெறிமுறைகள்

Vinkmag ad

ராமநாதபுரம் மாவட்டத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வழிகாட்டு நெறிமுறைகள் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிவிப்பு.‌.

இராமநாதபுரம், ஜுன்,6-
மாவட்டத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மாவட்ட அளவிலான வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது, தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த தவிர்க்க முடியாத காரணங்களின் அடிப்படையில் , 07.06.2021 முதல் 14.06.2021 காலை 06.00 மணிவரை தமிழக அரசு மாநிலம் முழுவதும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தியுள்ளது . இந்த ஊரடங்கின் போது , இராமநாதபுரம் மாவட்டத்தில் பின்வரும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது .
இராமநாதபுரம்
இராமநாதபுரத்தில் உள்ள பவுண்டுகடை ரோடு , வைசியர் வீதி , பாண்டிகண்மாய் சாலை ஆகிய பகுதிகளில் உள்ள காய்கறி மொத்த வியாபாரக் கடைகள் தவிர மீதமுள்ள பலசரக்கு கடைகள் மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும் . இப்பகுதிகளில் சில்லரை விற்பனை கடைகள் , நடைபாதை கடைகள் செயல்பட அனுமதி இல்லை . அரண்மனைப் பகுதிகளில் உள்ள காய்கறி கடைகள் செயல்பட அனுமதி இல்லை . இப்பகுதிகளில் சமூக இடைவெளியினை பின்பற்ற முடியாத காரணத்தால் , இங்கு செயல்படும் சிறு கடைகள் , காய்கறி கடைகள் , மீன் மற்றும் இறைச்சி கடைகள் அனைத்தும் செயல்பட அனுமதி இல்லை . ராஜா மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள இடத்தில் காய்கறி கடைகள் , பழக்கடைகள் தொடர்ந்து செயல்படும் . மேலும் , பாரதி நகர் அம்மா பூங்கா பகுதியில் உள்ள காய்கறி கடைகள் , பழக்கடைகள் செயல்பட தொடர்ந்து அனுமதிக்கப்படுகிறது . மீன் மொத்த வியாபாரம் மட்டும் அனுமதிக்கப்படுகிறது
பரமக்குடி
பரமக்குடி சின்னக்கடை வீதியில் சமூக இடைவெளியினை பின்பற்றி வியாபாரம் செய்ய முடியாத காரணத்தால் , இப்பகுதியில் சில்லரை வியாபாரம் மற்றும் மொத்த வியாபாரம் செய்ய அனுமதி இல்லை . ஏற்கனவே செயல்பட்டு வரும் பரமக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானம் , எமனேஸ்வரம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானம் மற்றும் விளையாட்டு மைதானங்களில் செயல்பட்டு வரும் காய்கறி கடைகள் , பழக்கடைகள் , பூக்கடைகள் தொடர்ந்து செயல்படும் .
முதுகுளத்தூர், கமுதி
முதுகுளத்தூர் , கமுதி ஆகிய பகுதிகளில் பேருந்து நிலையங்களில் காய்கறி கடைகள் , பழக்கடைகள் , பூக்கடைகள் தொடர்ந்து செயல்படும் .
சாயல்குடி
சாயல்குடி பள்ளி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள காய்கறி கடைகள் , பழக்கடைகள் , பூக்கடைகள் தொடர்ந்து செயல்படும் .
இராமேஸ்வரம்
இராமேஸ்வரம் இரயில் நிலையம் அருகே உள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட பயணிகள் தங்கும் இடத்தில் செயல்படும் காய்கறி கடைகள் , பழக்கடைகள் , பூக்கடைகள் தொடர்ந்து அதே இடத்தில் செயல்படும் .மீன் மொத்தவியாபாரம் பழைய மார்க்கெட் சாலையில் உள்ள பி.எஸ்.என்.எல் டவர் அருகில் தொடர்ந்து செயல்படும் .
ஆர்எஸ்மங்கலம், அபிராமம், பார்த்திபனூர்
ஆர்.எஸ்.மங்கலம் , அபிராமம் மற்றும் பார்த்திபனூர் பகுதிகளில் ஏற்கனவே பேருந்து நிலையங்களில் செயல்பட்டு வரும் காய்கறி கடைகள் , பழக்கடைகள் , பூக்கடைகள் தொடர்ந்து செயல்படும் .
தொண்டி
தொண்டி பகுதிகளில் ஏற்கனவே பேருந்து நிலையங்களில் செயல்பட்டு வரும் காய்கறி கடைகள் , பழக்கடைகள் , பூக்கடைகள் தொடர்ந்து செயல்படும் . மீன்மொத்த வியாபாரம் கிழக்கு கடற்கரை சாலையில் வட்டாணம் செல்லும் வழியில் செயல்படும் .
கீழக்கரை
கீழக்கரை பகுதியில் காய்கறி கடைகள் , பழக்கடைகள் , பூக்கடைகள் நடமாடும் வாகனங்கள் மூலம் தொடர்ந்து செயல்படும் . மீன் மொத்தவியாபாரம் கடற்கரையில் தொடர்ந்து செயல்படும் .
வணிக வளாகங்கள்
வணிக வளாகங்கள் இயங்க 26.042021 முதல் ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது . வணிக வளாகங்களில் இயங்கும் பலசரக்கு கடைகள் மற்றும் காய்கறி கடைகளுக்கும் ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது . மாவட்டம் முழுவதும் வாரச்சந்தைகள் எங்கும் செயல்பட அனுமதி இல்லை . கட்டுமானப் பொருட்கள் , எலெக்ட்ரிக்கல் கடைகள் , பேக்கரிகள்் செயல்பட அனுமதிக்கப்படுகிறது . மாவட்டம் முழுவதும் தேநீர் விற்பனை கடைகள் திற்க்க அனுமதி இல்லை . பேக்கரியில் இனிப்பு , காரம் மற்றும் ரொட்டி வகைகள் மட்டும் பார்சல் மூலம் விற்பனை செய்ய அனுமதிக்கப்படுகிறது . அனைத்து உணவகங்களிலும் பார்சல் சேவை மட்டும் காலை 06.00 மணி முதல் 10.00 மணி வரையிலும் , மதியம் 12.00 மணி முதல் 03.00 மணி வரையிலும் மற்றும் இரவு 06.00 மணி முதல் 09.00 மணி வரையிலும் வழங்க தொடர்ந்து அனுமதிக்கப்படும் . அனைத்து காய்கறி கடைகளும் , மொத்த மற்றும் சில்லரை வணிகங்களும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும் . அனைத்து கடைகளும் சமூக இடைவெளியினை பின்பற்றி செயல்பட வேண்டும் . ஏற்கனவே கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்பட்ட உத்தரவுகள் தொடர்ந்து செயல்படும் . இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளார்

News

Read Previous

பழகி விட்ட ……

Read Next

புனித நோன்பின் பத்து தத்துவங்கள்

Leave a Reply

Your email address will not be published.