பரமக்குடி கொல்லம்பட்டறை ஜமாஅத் தலைவர் ஏ.இப்ராஹிம் மரணம்
பரமக்குடி கொல்லம்பட்டறை ஜமாஅத் தலைவர் ஏ.இப்ராஹிம் மரணம்.
முஸ்லிம் ஐக்கிய ஜமாஅத் இரங்கல்.
பரமக்குடி மேலப்பள்ளிவாசல் கொல்லம் பட்டறை முஸ்லீம் ஜமாஅத் தலைவர் இப்ராஹிம் அவர்கள் இன்று(30.07.2020)உடல்நலக்குறைவால் பரமக்குடி பாலன்நகர் அவரது இல்லத்தில் வபாத்தானார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் ஜனாஸா பரமக்குடி மேலப் பள்ளிவாசல் மையவாடியில் இன்று (30.07.2020).அஸர் தொழுகைக்குப் பின்னர் நல்லடக்கம் செய்யப்படும் அன்னாரை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினருக்கு எல்லாம் வல்ல இறைவன் அழகிய பொறுமையை தந்தருள வேண்டும் என்றும் அன்னாரது மறுமை வாழ்விற்காக அனைவரும் துவா செய்யுமாறு மாவட்ட ஐக்கிய ஜமாத் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.