தமிழகத் தொழில்களை நடுக்கத்தில் தள்ளியிருக்கிறது ஊரடங்கு!
‘தமிழகத் தொழில்களை நடுக்கத்தில் தள்ளியிருக்கிறது ஊரடங்கு!’
– சிறு-குறு நிறுவன அதிபர்களின் கூக்குரல்
நாட்டின் தொழில் துறையில் மிக முக்கியமான களம், சிறு-குறு நிறுவனங்கள். தொழில் துறை என்பது டாடாக்களும் பிர்லாக்களும் மட்டும் அல்ல. டிவிஎஸ் நிறுவனம் ஒரு மோட்டார் சைக்கிளை உருவாக்குகிறது என்றால், அதற்கான நூற்றுக்கும் மேற்பட்ட உதிரிபாகங்களை உற்பத்திசெய்யும் சிறு-குறு நிறுவனங்களையும் உள்ளடக்கியதே அது. ஆடைகள் தொடங்கி ஊறுகாய் வரை உள்ளடக்கிய ஒவ்வொரு உற்பத்திக்கும் பின்னணியில் பல சிறு-குறு நிறுவனங்கள் இருக்கின்றன. தொழில் துறையில் பெருநிறுவனங்களைக் காட்டிலும் அதிகமானோருக்கு வேலைவாய்ப்பையும், பெரிய அளவிலான உற்பத்தியையும் மேற்கொள்பவை இவைதான். கரோனாவுக்குப் பின் சர்வதேச அளவிலான தொழில் முடக்கங்கள் ஒருபுறம் நம்மூர் தொழில்க ளைத் தாக்கியிருக்கின்றன என்றால், தொடரும் ஊரடங்குக் கட்டுப்பாடுகள் ஒருபுறம் முடக்கியிருக்கின்றன. தமிழகத்தின் முக்கியமான நகரங்களில் தொழிலகங்களின் நிலையை…
சுஜீஷ், தலைவர் (அம்பத்தூர் தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கம்),
பி.என்.ரெகுநாதராஜா ( கப்பலூர் தொழிலதிபர்கள் சங்கத் தலைவர்),
நேரு பிரகாஷ் (சிறு–குறு தொழில்கள் சங்கத் தலைவர், தூத்துக்குடி),
பா.அறிவொளி (கோவை சிட்கோ தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் நலச் சங்கம்), வெற்றி. ஞானசேகரன், ஒசூர், தமிழ்நாடு சிறு மற்றும் குறுந்தொழிற்சாலைகள் சங்கம் ஆகியோர் சிறுகுறு தொழில்கள் இன்று சந்திக்கும் பிரச்சினைகளை எடுத்துரைக்கின்றனர்.
தொகுப்பு: கா.சு.வேலாயுதன், கே.கே.மகேஷ், என்.சுவாமிநாதன்
(தமிழ் இந்துவில் வந்த கட்டுரை)