1. Home
  2. கேரளா

Tag: கேரளா

கேரளாவில் சாதிக்கும் இளம் ஐஏஎஸ் பட்டாளம்…

கேரளாவில் சாதிக்கும் இளம் ஐஏஎஸ் பட்டாளம்… கேரள முஸ்லிம் சமூகத்தின் தெளிவான அரசியல் பயணித்தலால் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் இளம் முஸ்லிம் பட்டதாரிகளுக்கு உரிய அங்கீகாரம் கிடைத்து வருகிறது.. அரசின் உயர் பதவிகளான மாவட்ட ஆட்சியர் மற்றும் பல்வேறு துறைகளில் செயலாளர் பதவியை திறம்பட நிர்வகித்து ஆட்சியாளர்களுக்கும் பொதுமக்களுக்கும்…

கொரோனாவை கேரளா கட்டுப்படுத்தியது எப்படி?.. நாம் அறிந்து கொள்வோம்!

கொரோனாவை கேரளா கட்டுப்படுத்தியது எப்படி?.. நாம் அறிந்து கொள்வோம்! ஏப்ரல் 12, 2020 ‘வாஷிங்டன் போஸ்ட்’ சிறப்புக் கட்டுரை கோவிட் 19 வைரஸைக் கட்டுப்படுத்தியதில் கேரள அரசாங்கத்தின் மகத்தான பணிகளை உலகப் புகழ் பெற்ற பத்திரிக்கையான ‘வாஷிங்டன் போஸ்ட்’ பட்டியலிட்டு பாராட்டியுள்ளது. கேரளாவின் பணிகள் இந்திய அரசாங்கத்திற்கே கூட முன்மாதிரியாக உள்ளது என வாஷிங்டன் போஸ்ட் குறிப்பிட்டுள்ளது. கேரளாவில்தான் முதல் தொற்று ஜனவரி மாதம் 30ம் தேதி பதிவானது. ஆனால் தொற்று சென்ற வாரத்தை ஒப்பீடு செய்யும் பொழுது 30% குறைந்தது மட்டுமல்ல; குணமடைந்தவர் களின் எண்ணிக்கை 34%ஆக உள்ளது. இது இந்தியாவிலேயே மிக அதிகம். மேலும் இது வரை 3பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர். இது மற்ற மாநிலங்களை ஒப்பிடும் பொழுது சிறந்த முன்னேற்றம் என குறிப்பிடும் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கை இது எப்படி சாத்தியமாயிற்று எனும் கேள்வியை எழுப்பி கீழ்கண்ட பதிலைத் தருகிறது: மிகத் தீவிரமான அதிக அளவிலான பரிசோதனைகள், தொற்று உள்ளவர்களைக் கண்டுபிடித்து நீண்ட நாட்களுக்கு தனிமைப்படுத்துதல், அவர்களுடன் தொடர்பு கொண்டவர்களை தீவிரமாக தேடிக் கண்டுபிடித்தல், தொற்று உள்ளவர்களுக்கும் குணமடைந்தவர்களுக்கும் அடிக்கடி மன நல ஆலோசனைகள்.. இவ்வாறு மன நல ஆலோசனையில் மட்டும் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் ஈடுபடுகின்றனர் எனவும் வைரசுக்கு எதிரான போராட்டத்தில் 30,000க்கும் அதிகமான மருத்துவ ஊழியர்கள் பணியாற்றுகின்றனர் எனவும் இப்பத்திரிக்கை குறிப்பிடுகிறது. கேரளா சாதித்தது எப்படி? வெல்கம் டிரஸ்ட் எனும் தனியார் அமைப்பின் முதன்மை அதிகாரியும் தொற்று நோய் நிபுணருமான ஷாஹித் ஜமீல் கூறுகிறார்: “கேரளாவின் அணுகுமுறை மிகவும் கண்டிப்பும் அதே சமயம் மனிதாபிமானம் இரண்டும் கலந்ததாக இருந்தது. தொற்று பாதித்தவர்கள் கண்டிப்புத் தன்மையுடன் பாரபட்சமின்றி தனிமைப்படுத்தப்பட்டனர். அதே சமயம் மகத்தான மனிதாபிமானம் அவர்களிடம் காட்டப்பட்டது.” ” உலக சுகாதார நிறுவனத்தின் இந்திய பிரதிநிதி ஹெங்க் பெகடம் இன்னோரு முக்கியமான கோணத்தை முன்வைப்பதையும் வாஷிங்டன் போஸ்ட் சுட்டிக்காட்டுகிறது: கேரளா அதிவிரைவில் எப்படி கோவிட் 19 வைரசுக்கு எதிராக தன்னைத் தயார்படுத்திக் கொண்டது? கடந்த காலங்களில் நிபா போன்ற வைரசை எதிர்த்துப் போராடிய அனுபவம் கேரளாவுக்கு கை கொடுத்தது. அது மட்டுமல்ல; அப்பொழுது தான் கற்று கொண்ட படிப்பினைகளை கேரளா அமலாக்கியது. துல்லியமாக இவை எல்லாம் இப்பொழுது கேரளவுக்கு பலன் தருகிறது.” கேரளாவின் வெற்றிக்கு வேறு இரண்டு காரணங்களையும் ஹெங்க் பெகடம் குறிப்பிடுகிறார். அவை: 1. ஆபத்து குறித்த அம்சங்களை மக்களுக்கு வெளிப்படையாக தெரிவித்தது. இது அரசாங்கத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கையை உருவாக்கியது. 2. கோவிட்19 க்கு எதிரான போரில் மக்களையும் ஈடுபடுத்தி, மக்கள் இயக்கமாக மாற்றியது.  கேரளா எதிர்கொண்ட ஆபத்துக்கள் வேறு எந்த ஒரு மாநிலத்தையும்விட கேரளா மிகப்பெரிய ஆபத்துக்கள சந்தித்தது. அவை என்ன? 1.    ஒரு ஆண்டிற்கு பத்து இலட்சம் சுற்றுலா பயணிகள் கேரளா விற்கு வருகின்றனர். 2.    கேரளா மக்கள் தொகையில் சுமார் 67 இலட்சம்பேர் வெளிநாடுகளில் பணியில் உள்ளனர். 3.    கேரளாவிலிருந்து ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் சீனாவில் கல்வி பயில்கின்றனர். இந்த பிரிவினரில் எவர் வேண்டுமானாலும் வைரசைக் கேரளாவிற்குள் கொண்டுவரும் அபாயம் இருந்தது. அதுதான் நடக்கவும் செய்தது. சீனாவில் தொற்று பரவும் செய்தி வந்த உடனே அங்கிருந்து கேரளாவுக்கு திரும்பும் அனைத்து மாணவர்களும் வளைகுடா நாடுகளிலிருந்து வருவோரும் கட்டாய பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர். இந்திய அரசாங்கம் அறிவிப்பதற்கு முன்பாகவே இந்த நடவடிக்கைகளை கேரள அரசாங்கம் எடுத்தது. அப்படித்தான் ஜனவரி 30 அன்றே சீனாவிலிருந்து வந்த மாணவருக்கு தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின்னர் அனைத்து நடவடிக்கைகளும் மிக வேகமாக எடுக்கப்பட்டன. எல்லாவற்றிற்கும் மேலாக முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக கம்யூனிஸ்டுகள் ஆட்சி புரிந்த கேரளத்தில் அடிப்படை சுகாதாரத்துக்கும் மருத்துவ வசதிகளுக்கும் கல்விக்கும் மிகுந்த முக்கியத்துவம் தரப்பட்டது எனும் அடிப்படை உண்மையையும் அதனால்தான் கல்வியிலும் மருத்துவ வசதிகளிலும் கேரளம் இந்தியாவிலேயே முதல் இடத்தில் உள்ளது எனவும் வாஷிங்டன் போஸ்ட் சுட்டிக்காட்டுகிறது. இந்த சிறந்த மருத்துவ அடிப்படை வசதிகள்தான் உலக சுகாதார நிறுவனம் பிப்ரவரி மாதத்திலேயே வெளியிட்ட அனைத்து வழிகாட்டுதல்…

கேரளா-முக்த் பாரதத்தை உருவாக்குவோம்!

கேரளா-முக்த் பாரதத்தை உருவாக்குவோம்! அமித் ஷா : நான் என்னன்னு சொல்ல மாட்டேன்.. ஆனா உங்களையெல்லாம் நான் ஏன் கூப்பிட்டேன்னு நீங்க சொல்லணும்! சரியா? குருமூர்த்தி : இந்த கருத்துரிமை, கருத்துரிமைன்னு சில அறிவிஜீவிங்க உளறிக்கிட்டிருக்காங்களே.. அவங்களை குளோஸ் பண்றதைப் பத்தியா? அமித் ஷா : அதைத்தான் கரெக்டா பண்ணிக்கிட்டிருக்கமே? அது இல்லே! தமிழிசை : மோடிக்கெதிரா…