துபாயில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க இஃப்தார் நிகழ்ச்சி

Vinkmag ad
துபாயில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க இஃப்தார் நிகழ்ச்சி
துபாய் :
துபாய் பேரமவுண்ட் ஓட்டலில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க இஃப்தார் நிகழ்ச்சி நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக வேலூர் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மான், தொழிலதிபர் பூதமங்கலம் ஜியாவுதீன்,  ஈடிஏ நிறுவன முன்னாள் செயல் இயக்குநர் அன்வர் பாஷா, ஈமான் பொதுச்செயலாளர் ஹமிது யாசின், அமீரக திமுக தலைவர் திருச்சி அன்வர் அலி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அமீரக காயிதே மில்லத் பேரவை பொதுச்செயலாளர் ஹமிதுர் ரஹ்மான் உள்ளிட்ட பலர் வாழ்த்துரை நிகழ்த்தினர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முன்னாள் மாணவர் சங்க நிர்வாகிகள் ரஹ்மத்துல்லா, இசாக், ஜாபர் சித்திக், ஜாஹிர் ஹுசைன் உள்ளிட்ட குழுவினர் செய்திருந்தனர்.
திண்டுக்கல் ஜமால் முஹைதீன் நிகழ்ச்சியை சிறப்பான முறையில் தொகுத்து வழங்கினார்.

News

Read Previous

சத்யேந்திரநாத் போஸ்…. நாடு மறந்துவிட்ட ஒரு விஞ்ஞானி

Read Next

தயிர் தரும் சுக வாழ்வு

Leave a Reply

Your email address will not be published.