கடையநல்லூர் எழுத்தாளர் சேயன் இப்ராஹிம் எழுதிய முதல் தலைமுறை மனிதர்கள் நூல் வெளியீட்டு விழா
கடையநல்லூர் எழுத்தாளர் சேயன் இப்ராஹிம் எழுதிய முதல் தலைமுறை மனிதர்கள் நூல் வெளியீட்டு விழா
கடையநல்லூர் பிப்ரவரி 12
கடையநல்லூர் ஹிதாயத்துல் இஸ்லாம் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் எழுத்தாளர் சேயன் இப்ராஹிம் எழுதிய முதல் தலைமுறை மனிதர்கள் நூல் வெளியீட்டு விழா இஸ்லாமிய இலக்கியக் கழகத் தலைவரும் முஸ்லிம் லீக் நகர தலைவருமான நல்லாசிரியர் கே எம் செய்யது மசூது தலைமையில் நடந்தது. பள்ளி நிர்வாகி ஏ ஜி செய்யது முகைதீன் கடையநல்லூர் பேட்டை ஜமாத் கமிட்டி தலைவர் எம் செய்யது இப்ராஹிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நூல் ஆசிரியர் எழுத்தாளர் சேயன் இப்ராஹிம் அனைவரையும் வரவேற்று நூல் அறிமுக உரையாற்றினார். நல்லாசிரியர் கே எஸ் ரசூல் அகமது இப்ராஹிம் தொகுத்து வழங்கினார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில செயலாளர் நெல்லை மஜீத் சென்னை சமரசம் இதழ் பொறுப்பாசிரியர் வி எஸ் முகமது அமீன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். சென்னை கீழக்கரை புகாரி ஆலிம் அரபிக் கல்லூரி முதல்வர் பி எஸ் செய்யது மசூது ஜமாலி ஆலிம் முதல் தலைமுறை மனிதர்கள் நூலை வெளியிட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நெல்லை மாவட்ட தலைவர் எல் கே எஸ் மீரான் முஹைதீன் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டு வாழ்த்தி பேசினார்.
சொக்கம்பட்டி பேராசிரியர் சுப்பையா பாண்டியன் சிறப்புரையாற்றினார். விழாவில் முஸ்லிம் லீக் தென்காசி மாவட்ட பொருளாளர் பிஏ செய்யது மசூது மாவட்ட முதன்மை துணைத் தலைவர் ஏ அப்துல் வகாப் மாவட்ட துணைச் செயலாளர் எஸ் ஏ ஹைதர் அலி கடையநல்லூர் நகர செயலாளர் ஆசிரியர் ஏகே முஸ்தபா மூத்த பத்திரிக்கையாளர் புளியங்குடி சாகுல் ஹமீது பைஜூல் அன்வார் அரபிக் கல்லூரி பேராசிரியர் எம் செய்யது இப்ராஹிம் ஆலிம் கடையநல்லூர் கே ஜே அப்துல்லா த.ம அப்துல்சமது எம்.ஏ முகமது கோயா வி ஏ எம் இக்பால், பி.ஏ பக்கீர் மைதீன் கடையநல்லூர் அதாயி இஸ்லாமிய பெண்கள் அரபிக் கல்லூரி முதல்வர் யாசீர் அலி ஆலிம் அதாயி உட்பட ஏராளமான பேர் பங்கேற்றனர்.