போலி மனிதர்
உண்மையாக நேசித்தேன்
ஏமாற்றப்பட்டேன்
நேர்மையாக இருந்தேன்
எல்லாவற்றையும் இழந்தேன்
கண்ணியத்தோடு பழகினேன்
காயப்படுத்தபட்டேன்
நியாயம் பேசினேன்
அவமதிக்கப்பட்டேன்
கேள்வி கேட்டேன்
நிராகரிக்கப்பட்டேன்
உதவி செய்தேன்
பழியை ஏற்றுக் கொண்டேன்
தவறுகளை எதிர்த்தேன்
விமர்சிக்கப்பட்டேன்
வார்த்தைகளை நம்பினேன்
மனசு உடைந்தேன்.
எல்லாவற்றுக்கும் மேலாக இந்தப்
போலி மனிதர்களிடம் இருந்து
நான் நிறைய கற்றுக்கொண்டேன் !
🌀 🌀 🌀 🌀 🌀 🌀
வாழ்வியல் சிந்தனை
ஜே.அன்புரோஸ்