தரணி ஆளும் தமிழ்
தரணி ஆளும் தமிழ்
உலகறியும் மொழிகளிலே தமிழ் மொழி போல்
உயர்தனிச் செம்மொழி வேறில்லை !
இலக்கண இலக்கிய வரலாற்றோடு
இலங்கும் தமிழுக்கிணை ஏதுமில்லை !
பொதிகை மலைச் சாரலாய்ப் புவிமீ து
பார்போற்ற வாழும் மொழித் தமிழா கும் !
வாழ்வியலாம் வள்ளுவத்தில் நிலை பெற்று
வான் போற்றும் தமிழெங்கள் அமுதா கும் !
சங்கம் வளர்த்த மாமதுரை வீதியெ ங்கும்
அங்கமாய்த் தமிழ்த்தூண்கள் அரணா கும் !
மூவேந்தர் புகழ் பாடிப் பாரெங் கும்
முத்தமிழே இனி எங்கள் உரமாகும் !
வரிவடிவத் தமிழின் தொன்மைக்குச் சான்றாகி
வைகையாற்றுத் தமிழர் நாகரிகமாய் க் கீழடி !
உலகின் முதல் மொழித் தமிழென்று
உணர்த்துகின்ற அகழாய்வே எங்கள் தாய்மடி !
ஈராயிரம் ஆண்டுக்கு முற்பட்ட தி ருக்குறளே
இணையிலா உலகப் பொதுமறை !
ஓராயிரம் ஆண்டுப் பழமை உரைக்கி ன்ற
ஆத்திச்சூடி நாமறிந்த திருமறை !
பிராமி வடிவம் தமிழுக்கு மூலமென
மாங்குளத்துக் கல்வெட்டு விளக் கியது !
இன்றளவும் ஒலிவடிவம் வரிவடிவம் காத்து
குன்றமென நின்றே தமிழ் துலங்கி யது !
தமிழைப்போல் இனிதான மொழி வேறில் லையென
தரணிக்கு எடுத்துரைத்தான் நம் ம காகவி !
தமிழெங்கள் உயிருக்கு நேரென்று நெஞ்சுயர்த்தி
அமுதமொழித் தமிழ்தான் என்றான் பு ரட்சிக்கவி !
உலகெங்கும் கால்பதித்த தமிழரின் மேன்மை
பலகாலம் பறைசாற்றும் தமிழின் மா ண்பை !
தன்னிலிருந்து மலர்ந்த சொல் தம் இழ்
தரணி ஆளும் தமிழுக்கு மகுடமாகு ம் !
கவிச்சுடர் கா.ந.கல்யாணசுந்தரம் , சென்னை 600100
9443259288