1. Home
  2. தரணி

Tag: தரணி

தரணி ஆளும் தமிழ்

தரணி ஆளும் தமிழ் உலகறியும் மொழிகளிலே தமிழ் மொழிபோல் உயர்தனிச்  செம்மொழி வேறில்லை ! இலக்கண இலக்கிய வரலாற்றோடு இலங்கும் தமிழுக்கிணை ஏதுமில்லை ! பொதிகை மலைச் சாரலாய்ப்  புவிமீது பார்போற்ற வாழும் மொழித் தமிழாகும் ! வாழ்வியலாம் வள்ளுவத்தில் நிலைபெற்று வான் போற்றும் தமிழெங்கள் அமுதாகும் ! சங்கம் வளர்த்த மாமதுரை வீதியெங்கும் அங்கமாய்த் தமிழ்த்தூண்கள் அரணாகும் ! மூவேந்தர் புகழ் பாடிப்  பாரெங்கும்  முத்தமிழே இனி எங்கள் உரமாகும் ! வரிவடிவத் தமிழின் தொன்மைக்குச் சான்றாகி  வைகையாற்றுத் தமிழர் நாகரிகமாய்க்  கீழடி ! உலகின் முதல் மொழித் தமிழென்று  உணர்த்துகின்ற அகழாய்வே எங்கள் தாய்மடி ! ஈராயிரம் ஆண்டுக்கு முற்பட்ட திருக்குறளே இணையிலா உலகப் பொதுமறை ! ஓராயிரம் ஆண்டுப் பழமை உரைக்கின்ற ஆத்திச்சூடி நாமறிந்த திருமறை ! பிராமி வடிவம் தமிழுக்கு மூலமென மாங்குளத்துக்  கல்வெட்டு விளக்கியது ! இன்றளவும் ஒலிவடிவம் வரிவடிவம் காத்து குன்றமென நின்றே தமிழ் துலங்கியது ! தமிழைப்போல் இனிதான மொழி வேறில்லையென  தரணிக்கு எடுத்துரைத்தான் நம் மகாகவி ! தமிழெங்கள் உயிருக்கு நேரென்று நெஞ்சுயர்த்தி அமுதமொழித் தமிழ்தான் என்றான் புரட்சிக்கவி ! உலகெங்கும் கால்பதித்த தமிழரின் மேன்மை பலகாலம் பறைசாற்றும் தமிழின் மாண்பை ! தன்னிலிருந்து மலர்ந்த சொல் தம்இழ்   தரணி ஆளும் தமிழுக்கு மகுடமாகும் ! கவிச்சுடர் கா.ந.கல்யாணசுந்தரம் , சென்னை  600100  9443259288

தரணியே காத்திருக்கும் !

தரணியே காத்திருக்கும் ! ( எம். ஜெயராமசர்மா … மெல்பேண் ) தைபிறந்தால் வழிபிறக்கும் தடைகளெலாம் அகன்றுவிடும் மெய்வருந்தி உழைப்போரை மேதினியே பாராட்டும் கைநிறையக் காசுவர கெளரவமாய் நாமிருக்க கடவுளது நினைப்புடனே கடினமாய் உழைத்துநிற்போம் பொய்யுரைக்கும் எண்ணமதை பொசுக்கிவிட முயன்றிடுவோம் ஐயனது குறள்வழியே அனைவருமே நடந்திடுவோம் செய்கின்ற அத்தனையும்…

தரணியிலே உயர்ந்திடுவோம்

தரணியிலே உயர்ந்திடுவோம் ( எம்.  ஜெயராமசர்மா ..  மெல்பேண் ) தலைவருடி எனையணைத்து தனதுதிரம் தனைப்பாலாய் மனமுருகித் தந்தவளே மாநிலத்தில் தாய்தானே மடிமீது எனைவைத்து மாரியென முத்தமிட்டு விழிமூடித் தூங்காமல் விழித்தவளும் தாய்தானே படிமீது கிடந்தழுது பலமுறையும் வேண்டிநின்று பாருலகில் எனைப்பெற்ற பண்புடையோள் தாய்தானே விரதமெலாம் பூண்டொழுகி விதியினையே…