இலவச சட்ட விழிப்புணர்வு முகாம்
முதுகுளத்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இலவச சட்ட விழிப்புணர்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது. முதுகுளத்தூர் அரசு கல்லூரி என்.எஸ்.எஸ். மாணவ,மாணவிகள் சார்பில் இம்முகாம் நடைபெற்றது.
இதில் கல்லூரி முதல்வர்.க.விமலா தலைமை வகித்தார். மாணவ, மாணவிகளுக்கு பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ், மணவாழ்க்கை பிரச்னைக்கு தீர்வு, வரதட்சணைக் கொடுமை சம்மந்தான வழக்கு, மோட்டார் வாகன விபத்து இழப்பீடு பெறுதல், பெண் கொடுமைகளுக்கு எதிரான சட்ட உதவிகள் போன்ற இலவச சட்ட ஆலோசனைகளைப் பற்றி வழக்குரைஞர் ஆர்.எம்.மாரிமுத்து எடுத்துரைத்தார்.
முகாமில் என்.எஸ்.எஸ்.முகாம் ஒருங்கிணைப்பாளர் ஆ.பாலமுருகன் வரவேற்றார். கல்லூரியின் கௌரவ விரியுரையாளர் அ.ரஞ்சித்குமார் நன்றி தெரிவித்தார்.