முதுகுளத்தூரில் விநாயகர், முருகன் கோயில்கள் கட்டும் பணி தொடக்கம்
முதுகுளத்தூரில் புதிதாக விநாயகர் மற்றும் முருகன் கோயில் கட்டும் பணிகள் புதன்கிழமை தொடங்கின.
முதுகுளத்தூர் யாதவர் சங்கம் அலுவலக வளாகத்தில் விநாயகர் மற்றும் முருகன் கோயில் அமைக்கும் பணிக்கு நிலைக்கால் அமைக்கும் பணி நடைபெற்றது. நிகழ்ச்சியில் முதுகுளத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் மலேசியா எஸ்.பாண்டியன் தலைமை வகித்தார். முன்னாள் மாவட்டக் கல்வி அலுவலர் கூ.லெட்சுமணன்,ஸ்ரீ கண்ணா மெட்ரிக் பள்ளியின் நிறுவனர் கே.காந்திராஜன், சங்கச் செயலாளர் முத்துச்சாமி, பொருளாளர் பால்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தாலுகா யாதவர் சங்க தலைவர் தெய்வேந்திரன் வரவேற்றார். சங்க நிர்வாகி வாகைக்குளம் அர்ச்சுணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.